என் மலர்
நீங்கள் தேடியது "us citizenship"
- அமெலியா 1945ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஸ்லோவேனியாவில் வளர்ந்தவர்
- தனது தாயாரை ஒரு இரும்பு பெண்மணி என குறிப்பிட்டுள்ளார், மெலனியா
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump).
மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs). ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்டதால், அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.
1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர்.
2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.
அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி (Miami) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாவ்ஸ் உயிரிழந்தார்.
இத்துயர செய்தியை மெலனியா தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் மெலனியா, "அமெலியா ஒரு இரும்பு பெண்மணி. கணவர், குழந்தைகள், மருமகன் ஆகியோரிடம் மிகுந்த பாசம் உடையவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அவர் நினைவை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
- பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.
- இந்த உத்தரவு அமெரிக்காவில் பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால், "இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது. பேனாவைக் கொண்டு இதை மாற்றிவிட முடியாது. ட்ரம்ப் என்ன சொன்னாலும் சரி, பிறப்புரிமை குடியுரிமை நாட்டின் சட்டமாகும். எந்த விலை கொடுத்தேனும் அதைப் பாதுகாக்க நான் போராடுவேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 19ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 'அமெரிக்க குடியுரிமை' கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை (C-SECTION) அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவில் எச்-1பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வழி வகை செய்யும் விதத்தில் எச்-1பி விசா வழங்குவதில் கடுமையான நடைமுறைகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் எச்-1பி விசாவில் பணிபுரிவோரின் துணைவர்கள் வேலை பார்க்க வழங்கப்படும் எச்-4 விசாவை ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவில் ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 2017-ம் ஆண்டில் 50, 802 பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது கடந்த 2016-ம் ஆண்டைவிட 4 ஆயிரம் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2016-ம் ஆண்டில் 46,188 பேரும், 2015-ம் ஆண்டில் 42,213 பேரும் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
இவர்களில் 12 ஆயிரம் பேர் கலிபோர்னியாவிலும், நியூஜெர்சியில் 5,900 பேரும், டெக்காசில் 3,700 பேரும், நியூயார்க், பென்சில்வேனியாவில் 7,100 பேரும் தங்கியுள்ளனர்.
மொத்ததில் கடந்த 2016-ம் ஆண்டில் 7 லட்சத்து 7 ஆயிரத்து 265 பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து18 ஆயிரத்து 559 பேர் மெக்சிகோவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தவிர சீனாவை சேர்ந்த 37,674 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டினர் 36,828 பேரும், டெமெனி குடியரசை சேர்ந்த 29,734 பேரும், நியூயார்கை சேர்ந்த 25,961 பேரும் குடியுரிமை பெற்றவர்களில் அடங்குவர்.
குடியுரிமை பெற்றவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகப்பேர் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 10 ஆயிரத்து 987 பேரும், பெண்களில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 234 பேரும் ஆவர். குடியுரிமை பெற்றவர்களில் மெக்சிகோ நாட்டினர் முதலிடத்திலும், இந்தியர்கள் 2-வது இடத்தையும் பெற்று உள்ளனர். #USCitizenship #indians