என் மலர்
நீங்கள் தேடியது "Uthukottai"
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூரை அடுத்த மெய்யூர் மேட்டு காலனி தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (58) லாரி டிரைவர்.
இவருடைய மனைவி காளியம்மாள் (50), இவர்களுக்கு தேவன் என்ற மகனும், மருதானி என்ற மகளும் உள்ளனர்.
தேவன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தேவன் தன் தாய் காளியம்மாள், தங்கை மருதானி ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு பென்னாலூர் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார்.
வெலமகண்டிகை பகுதியில் சென்ற போது புலிகுன்றம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் தேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த காளியம்மாள், தேவன், மருதானி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காளியம்மாளை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை:
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடும். அப்போது ஊத்துக் கோட்டை தரைப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை பட்டு திருவள்ளூர், பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆரணி ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ. 28 கோடியை அரசு ஒதுக்கியது.
இந்த மேம்பாலம் 450 மீட்டர் நீளத்தில் 11 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது. மேம்பாலம் மீது பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறங்களிலும் நடை பாதையும் அமைக்கப் படுகிறது. தரை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் அமைய உள்ள இந்த மேம் பாலத்தை 21 தூண்கள் தாங்கி நிற்கும்.
மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக தரைப்பாலத்தை ஒட்டி சாலை அமைக்கும் பணிகள்நடை பெற்று வருகின்றன. மேலும் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தூண்கள் நிறுவும் பணிகள் தொடங் கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆறு ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்த நிலையில் ஆரணி ஆற்றில் கடந்த 1-ந் தேதி அரசு மணல் குவாரி தொடங்கியது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
குவாரியை மூடக் கோரி கடந்த 1-ந் தேதி ஊத்துக்கோட்டையில் அனைத்து கடைகள் மூடப்பட்டன. அனைத்துக்கட்சி மனித சங்கிலி போராட்டமும் 2-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியலும் நடந்தது. எனினும் மணல் குவாரி தொடர்ந்து நடந்து வந்தது.
இதனை கண்டித்தும், மணல் குவாரியை உடனடியாக மூட வலியுறுத்தியும் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகில் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட 55 பெண்களை கைது செய்னர். அவர்களை ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னேரி, நரசாரெட்டி கண்டிகை, புதுகுப்பம், ஆம்பாக்கம், பேரடம், மதனம்பேடு, என்.எம். கண்டிகை, தாராட்சி, நெல்வாய், பாலவாக்கம், கரடிபுத்தூர், செங்கரை, தேர்வாயகண்டிகை, கண்ணன்கோட்டை.
பூண்டி, சீதஞ்சேரி, அம்மம் பாக்கம், காரணி, சுப்பாநாயுடு கண்டிகை, நந்தனம், கொடியமேபேடு, படயகொடியமேபேடு, வெள்ளாத்துக்கோட்டை, நம்பாக்கம், அரியத்தூர், சென்றான்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாந்தோட்டங்கள் உள்ளன.
இங்கு பங்கினபள்ளி, ருமானி, ஜவாரி, சில்பசந்த், மல்கோவா, ஹாபிஸ், செந்துரை பழரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த மாம்பழங்களுக்கு கடும் கிராக்கி உண்டு.
தஷ்போது சீசனையொட்டி ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அதிக அளவில் மாம்பழங்கள் வந்து குவிந்து வருகின்றன.
இங்கு திருவள்ளூர், பூந்தமல்லி, போரூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், சென்னை போன்ற வெகு தூரத்தில் இருந்து வரும் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் மாம்பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நிபா வைரஸ் பழங்களால் பரவுகிறது என்ற பீதியால் பெரும்பாலான பொதுமக்கள் மாம்பழங்களை சாப்பிட தயங்குகின்றனர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது
பங்கனபல்லி கிலோ ரூ. 20-க்கு விற்கப்படுறது. அதேபோல் ஜவாரி கிலோ ரூ. 25, ருமானி ரூ. 8, செந்துரை ரூ. 8, நாட்டு ரகம் வெறும் ரூ. 5-க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பங்கனபல்லி ரூ. 40, ஜவாரி ரூ. 50, ருமானி ரூ. 25, செந்துரா ரூ. 30 நாட்டு ரகம் ரூ.20 விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிபா வைரஸ் பீதி காரணமாக பொது மக்களிடத்தில் மாம்பழம் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாக புதுகுப்பத்தை சேர்ந்த மாரி என்ற வியாபாரி தெரிவித்தார்.
வியாபாரம் இல்லாததால் ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த மாம்பழங்கள் அழுகி வருகின்றன. விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று கொட்டி அழித்து வருகின்றனர். #tamilnews
ஊத்துக்கோட்டை அருகே உள்ள உப்பரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் தனது வயலில் நாற்று நடவு பணிகளுக்காக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள கண்ணாவரம் பகுதியில் இருந்து 25 பெண் தொழிலாளர்களை அழைத்து வந்து இருந்தார்.
உப்பரபாளையம் பகுதியில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது வயல்வெளி பகுதியில் இருந்த மின்கம்பம் ஒன்று சாய்ந்ததில் மின் வயர்கள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தெரியப்படுத்தியும் மின் கம்பம் சரி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் வயலில் நாற்று நடவு பணியில் ஈடுபட்டிருந்த முனியம்மாள் (வயது 50) மீது தாழ்வாக தொங்கிய மின் வயர் உரசியது.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற பெண் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பென்னாலூர்பேட்டை போலீசார் முனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கால் முனியம்மாள் பலியாகி உள்ளார். இது தொடர்பாக ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர், போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர், லைன்மேன், உதவியாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
பள்ளிப்பட்டு அருகே உள்ள கரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 45). ஆந்திர மாநிலம் போக்குவரத்து துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே பூச்சாட்டூரில் வந்த போது திடீரென அருணாச்சலத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.
சிறிது நேரத்தில் அருணாச்சலம் டிரைவர் இருக்கையிலேயே சரிந்து விழுந்து இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பது தெரிந்தது.
மரணம் ஏற்படும் நேரத்திலும் அவர் பாதுகாப்பாக பஸ்சை நிறுத்தியதால் அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருணாச்சலத்துக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி அதிகமானதால் செங்குன்றம் பஸ் நிறுத்தத்தில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்.
இதேபோல் பிச்சாட்டூர் அருகே வந்தபோது மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கு கடையில் மாத்திரை வாங்கி இருக்கிறார். இதன் பின்னர் அருணாச்சலம் தொடர்ந்து பஸ்சை ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிச்சாட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
திருவள்ளூரை அடுத்த ஒதப்பை மற்றும் ஆற்றுப்பாக்கம் கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளுர்- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்து வந்த பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்காலிகமாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் விரைவில் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ஒதப்பை பகுதியில் அரசு குவாரி மூலம் மணல் எடுக்க அனுமதி அளித்த போது நிர்ணயித்த அளவை விட கூடுதல் ஆழத்தில் மணல் எடுத்ததால் ஆற்று நீர் வற்றிப் போனது.
இதனால் ஒதப்பை மற்றும் ஆற்றுப்பாக்கம் பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்தாலும் நீர் வராததால் மக்கள் குடிநீருக்காக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்’ என்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி கிராமத்தில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து இருந்தது.
நேற்று காலை பூஜை முடிந்த பின்னர் பூஜாரி ராம மூர்த்தி கோவிலை பூட்டிச் சென்றார். பின்னர் மாலையில் வந்தபோது கோவில் கதவு பூட்டுஉடைந்து கிடந்தது.
மேலும் அங்கிருந்த உண்டியலும் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சுமார் 1½ அடி உயரமுள்ள சிவன்-பார்வதி ஐம்பொன் சிலை மற்றும் குத்துவிளக்குகள், பூஜை பொருட்களை காணவில்லை. அவற்றை கொள்ளை கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது. ஐம்பொன் சிலையின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும். உண்டியலில் ரூ. 10 ஆயிரத்துக்கும் மேல் இருந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரியை எதிர்த்து தி.மு.க.வினர் ஊத்துக் கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட வடக்கு செயலாளர் கி.வேணு தலைமைதாங்கி னார். அவைத்தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, தீர்மானக்குழு உறுப்பினர் சி.ஹெச்.சேகர், செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் அபிராமி குமரவேல், குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் இளைஞர் அணி அமைப்பாளர் லோக்கேஷ், நகர செயலாளர் அப்துல் ரஷீத், நிர்வாகிகள் மோகன், சம்சுதீன், அப்துல்ரகீம், சிராஜூதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்துக்கு பின்னர் தி.மு.க.வினர் தாலூக்கா அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து தாசில்தார் ரவிச்சந்திரனிடம் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.#DMK
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூள மேனியில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கி.வேனு தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராசன், மூர்த்தி, குணசேகர், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், சத்தியவேல், இளைஞர் அணி அமைப்பாளர் லோக் கேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி துவக்க உள்ளதை கண்டித்து வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் நேற்று இரவு 9 மணி அளவில் தொம்பரம்பேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது ஒன்றின் பின் ஒன்றாக 10 லாரிகள் வேகமாக நிற்காமல் சென்றதால் சந்தேகம் அடைந்த சந்திரதாசன் ஜீப்பில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தி சென்று அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்.
லாரிகளில் சவுடு மணல் இருந்தது. இதற்கான ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து சவுடு மணல் கடத்தியதாக 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்காக முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக தடம் அமைக்க சவுடு மணல் எடுத்து செல்வதாக விசாரணையில் தெரியவந்தது.
எனினும் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் சவுடு மணல் கடத்தியதால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தெரிவித்தார்.
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வெங்கல் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாமரைப்பாக்கம் ஏரியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அமணம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்களான வெங்கடேசன், தமிழரசன், விவேக் ஆகியோரை கைது செய்தனர். #Tamilnews
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் ஷட்டர்கள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.
அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஓதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரை பாக்கம், அணைக்கட்டு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.
கடந்த 2015-ம் வருடம் பெய்த மழைக்கு அணை முழுவதுமாக நிரம்பியதால் அதிகபட்சமாக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மொத்தம் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.
பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காகவும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஓதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட ரூ. 6.70 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியை கொண்டு 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் பலத்த மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பு அணை கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது கோடை வெயில் காரணமாக கொசஸ்தலை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தடுப்பு அணை கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் தடுப்பு அணை பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews