என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Uttar Pradesh Assembly Election"
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் நாள்தோறும் அதிரடியான தேர்தல் வாக்குறுதியை அளித்து அசத்தி வருகிறார். அவரது தேர்தல் வாக்குறுதிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கு வருடந்தோறும் 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பஸ்களில் பெண்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படும். விதவைகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு பிரியங்கா அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் அடைப்பு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்