என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uzbekistan"

    • சிம்பா என்று அழைத்து அவற்றை அவர் கொஞ்சுகிறார்.
    • சிங்கங்களில் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியபோது நிலைமை மோசமடைந்தது.

    உஸ்பெகிஸ்தானின் பார்க்கெண்டில் உள்ள தனியார் மிருகக்காட்சிசாலையில் மனிதனை சிங்கங்கள் குதறியெடுத்து கொன்ற சில்லிட வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

    டிசம்பர் 17 அன்று நடந்த இந்த சம்பவத்தில் தாஷ்கண்ட் பிராந்தியத்தின் பார்க்கன்ட் மாவட்டத்தில் அமைந்துள்ள லயன் பூங்கா தனியார் மிருகக்காட்சிசாலையில் ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட மூன்று சிங்கங்களை விலங்கு காப்பாளர் [கீப்பர்] நெருங்கியுள்ளார்.

    தன்னை வீடியோ பதிவு செய்வதற்காக 3 சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்ட  கூண்டுக்குள் நுழைந்துள்ளார். தனது காதலியை கவர அவர் சிங்கங்களுடன் வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    வீடியோவில், அந்த நபர் சிங்கங்களுக்கு அருகாமையில் இருப்பதைக் காணலாம். சிம்பா என்று அழைத்து அவற்றை அவர் கொஞ்சுகிறார். முதலில் ஆபத்தை உணராத அவர், அமைதியாகத் தோன்றினார்.

    ஆனால் சிங்கங்களில் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியபோது நிலைமை மோசமடைந்தது. மற்ற சிங்கங்களும் அவரை சூழ்ந்து தாக்கத் தொடங்கியது பதிவாகி உள்ளது.காயங்களால் அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    மிருகக்காட்சிசாலை காவலர்கள் பொதுவாக விலங்குகளை பாதுகாப்பாக கையாள பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள ஆபத்துகளை இந்த சோகமான நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. 

    • நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • வைஷாலிக்கு நோடிர்பேக் கைகுலுக்க தவிர்த்தது கடும் சர்ச்சையாக மாறியது.

    விஜ்க் ஆன் ஜீ:

    நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரின் நான்காவது சுற்று போட்டியில் தமிழகத்தின் வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் உடன் விளையாடினார்.

    இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரருடன் கைகுலுக்க முயன்றார். ஆனால் அவர் கைகுலுக்க மறுத்து விளையாட ஆரம்பித்தார்.

    வழக்கத்தை மீறி வைஷாலிக்கு நோடிர்பேக் கைகுலுக்க தவிர்த்தது கடும் சர்ச்சையாக மாறியது. மதரீதியிலான காரணங்களுக்காக கை குலுக்கவில்லை என நோடிர்பேக் கூறினாலும், முந்தைய தொடர்களில் வீராங்கனைகளுக்கு கைகுலுக்கியதைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைஷாலிக்கு பூங்கொத்து மற்றும் சாக்லேட்களை வழங்கி உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் மன்னிப்பு கேட்டார்.

    உஸ்பெகிஸ்தானில் நடந்து வரும் மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    சமர்கன்ட்: 

    மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு அந்த நாடுகளுக்கு சென்று வந்தார். 

    இந்நிலையில், மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் முதன்முறையாக ஒன்றுகூடி உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இருநாள் பயணமாக நேற்று அந்நாட்டின் தலைநகரான சமர்கன்ட் நகரை சென்றடைந்தார். 

    சமர்கன்ட் விமான நிலையத்தில் அவருக்கு உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்அஜிஸ் கமிலோவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    இந்நிலையில், இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் பங்கேற்ற மத்திய ஆசிய நாடுகளின் மாநாடு இன்று நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:

    சமர்கன்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானும் பங்கு பெற்றிருப்பது அளவிலா மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த உஸ்பெகிஸ்தான் அரசுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயேவ் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. #PMModi #Uzbekistan #PresidentShavkatMirziyoyev
    புதுடெல்லி:

    இந்திய தலைநகர் டெல்லியில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான அரசு ரீதியான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இருநாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர் முன்னிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு அதிகாரிக்கு அளித்தார்.

    இதையடுத்து, பேசிய பிரதமர் மோடி, சிறப்பு வாய்ந்த நண்பர் என உஸ்பெகிஸ்தான் அதிபரை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் நடைபெற்ற ஆலோசனை இருநாடுகளின் உறவுக்கு நல்வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.



    பிரதமர் மோடியை தொடர்ந்து பேசிய உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காட், பழமையான வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட இந்திய மக்களை தாம் மதிப்பதாக கூறியுள்ளார். #PMModi #Uzbekistan #PresidentShavkatMirziyoyev
    அரசுமுறை பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் வந்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தாஷ்கென்ட் நகரில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்தினார்.
    தாஷ்கென்ட்:

    மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்த பயணத்தின் நிறைவுகட்டமாக நேற்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் அஜிஸ் காமிலோவ் மலர்கொத்து அளித்து அன்புடன் வரவேற்றார்.

    பல்வேறு துறைகளில் இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் உயரதிகாரிகள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ்-ஐ சுஷ்மா சந்தித்து பேசினார்.

    சுதந்திர போராட்ட தியாகியும் இந்தியாவின் இரண்டாவது பிரதமருமான லால் பகதூர் சாஸ்திரி இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் செய்வதற்காக கடந்த 1966-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தான் தலைநகரான தாஷ்கென்ட் நகருக்கு வந்திருந்தார்.

    10-1-1966 அன்று வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. அதற்கு மறுநாள் 11-1-1966 அன்று லால் பகதூர் சாஸ்திரி(61) மாரடைப்பால் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், அவரது மரணம் இயற்கையானது அல்ல, அமெரிக்க உளவுத்துறையின் கைவரிசையாக இருக்கலாம் என அப்போது பரவலாக ஒரு கருத்து நிலவியது.


    மறைந்த லால் பகதூர் சாஸ்திரிக்கு அவரது உயிர் பிரிந்த தாஷ்கென்ட் நகரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்துக்கு இன்று சென்ற மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், லால் பகதூர் சாஸ்திரியின் மார்பளவு சிலைக்கு மலர்வளையம் சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார்.

    அந்த சிலையை வடிவமைத்த சிற்பி யாக்கோவ் ஷப்பிரி என்பவர் சுஷ்மாவுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
    ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #pmnarendramodi
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். 

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்பின்போது அந்நாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும், இந்தியாவை சேர்ந்த உயரதிகாரிகளும் உடனிருந்தனர். #tamilnews #pmnarendramodi
    ×