என் மலர்
நீங்கள் தேடியது "Valluvar Kottam"
- 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைய உள்ளது.
சென்னை:
சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் சந்திப்பு. ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை தினமும் கடந்து செல்கின்றது.
இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைய உள்ளது. வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எழிலன் எம்.எல்.ஏ., வள்ளுவர் கோட்டத்தின் புனரமைக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்காக கடந்த 1974-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மேலும், சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல் தேர் 128 அடி உயரம் கொண்டதாகவும் 67 மீட்டர் நீலம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பாழடைந்து இருந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவு கூடம், விற்பனை கூடம், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒலி ஒளி காட்சி கூடம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால் முன்னதாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் முதலமைச்சர் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நவீன உத்திகளைப் பயன்படுத்தி புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.
- பொதுமக்கள் தேநீர் அருந்துவதற்கான கடைகள் எல்லாம் உருவாக்கப்பட இருக்கிறது.
சென்னை:
சென்னை, நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவருக்காக ஏறத்தாழ 1,600 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் எழுப்பப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவு அரங்கம்தான் வள்ளுவர் கோட்டம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 1976-ம் ஆண்டு வள்ளுவர் கோட்டம், சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. கம்பீரமாகவும், சென்னையின் அடையாளமாக வள்ளுவர் கோட்டம் திகழ்கிறது. தற்போது வள்ளுவர் கோட்டம் கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. இதனை, புனரமைப்பதற்காக கடந்த நிதியாண்டில் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதற்கிணங்க பராமரிப்புப் பணிகள் ரூ.80 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.
நவீன உத்திகளைப் பயன்படுத்தி புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, இங்குள்ள கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாகச்சுற்றுச் சுவர் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இதுவரை வாகனங்கள் தரைதளத்தில் மட்டும் நிறுத்தப்பட்டது. மீதியிருக்கக்கூடிய வாகனங்கள் நிகழ்ச்சி நடைபெறும் போது சாலைப்பகுதியில் நிறுத்தப்படும் சூழ்நிலை இருந்தது. இப்போது ஏறத்தாழ சுமார் 180 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நிறுத்துவதற்காக தனியாக அரங்கம் அமைக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கிறது. வள்ளுவர் கோட்டம் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தான் இருக்கிறது. எனவே, இருக்கின்ற இடத்தை வைத்து அதிக மக்கள் வந்து செல்லும் வகையிலும், பயன்படுத்தும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், புதுப்பொலிவோடு, கலை நயத்தோடு அமைக்கப்பட்டு வருகின்றது.
அதேபோல, பொதுமக்கள் தேநீர் அருந்துவதற்கான கடைகள் எல்லாம் உருவாக்கப்பட இருக்கிறது. இன்னும் கிடைக்கக்கூடிய ஆலோசனைகளை பெற்று பொதுமக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மையமாக அமையக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக லேசர் ஷோ நடத்தப்பட இருக்கிறது. பழைய வள்ளுவர் கோட்டத்தை விட மாறுபட்ட அளவில் திருக்குறளைப் பற்றிய ஆய்வு மையம் அமைக்கப்பட இருக்கிறது. அதேநேரத்தில், இன்னும் பணிகள் நடைபெறும்போது கிடைக்கக்கூடிய நவீன கட்டமைப்புகளுடன் பொதுமக்களை கவரும் வகையில் வள்ளுவர் கோட்டம் அமையும்.
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கல்தேர் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிவுறுகிற போது, ஒரு புதிய பொலிவோடு வள்ளுவர் கோட்டம் மக்களின் விருப்பமான இடமாக நிச்சயம் காட்சியளிக்கும். காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதங்களில் இது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இந்தப் பணிகள் திட்டமிட்டபடி, வருகிற டிசம்பர் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.
சென்னை:
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மத்திய சென்னை தலைவர் எஸ்.சாமுவேல் வரவேற்றார்.
அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பேசும்போது கூறியதாவது:-
மத்திய-மாநில அரசுகள் பல கோடி ரூபாய் வரி வசூலித்து தரும் வணிகர்களை முழுமையாக புறக்கணித்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.
சில்லறை வணிகத்தை கைப்பற்ற நினைக்கும் வால்மார்ட் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி கூறி உள்ளோம். ஆனால் மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள சட்ட விதிகளை எளிமைப்படுத்த சொன்னோம். அதையும் செய்யவில்லை. ஜி.எஸ்.டி. வரி சட்ட விதிகளை எளிமைப்படுத்தி 28 சதவீதம், 18 சதவீத வரி விதிப்புகளை முற்றிலும் திரும்ப பெற வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்ற அறிவிப்பை பயன்படுத்தி அதிகாரிகளின் அத்துமீறல்களை அரசுக்கு எடுத்து கூறினோம். பிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக்கோரி மனு கொடுத்தோம். இதே போல் எங்களது 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மத்திய- மாநில அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தோம். தமிழக முதல்-அமைச்சரையும் சந்தித்து பேசினோம்.
ஆனால் இதுவரை மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வணிகர்களை புறக்கணித்து வருகிறது.
இதனால் பேரமைப்பு சார்பில் கடந்த செப்டம்பர் 28-ந்தேதியன்று கறுப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதன் பிறகும் அரசு மவுனமாக இருப்பதால் இன்று மண்டல வாரியாக உண்ணாவிரதம் நடத்துகிறோம்.
பேரமைப்பு நிர்வாகிகளை அழைத்து மத்திய- மாநில அரசுகள் பேசி தீர்வு காண வேண்டும்.இல்லையென்றால் காலவரையற்ற கடையடைப்பு, வரி வசூல் மறுப்பு, சட்டமன்ற முற்றுகை போராட்டம் என அறிவிப்புகள் வெளியிடும் கட்டாயம் ஏற்படும். எனவே அரசு உரிய தீர்வுகளை விரைந்து காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உண்ணாவிரதத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் கள் வி.பி.மணி, பேராசிரியர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர்கள் என்.டி.மோகன், ஜெயபால், ரவி, ஆதிகுருசாமி, நந்தன், கிருஷ்ணன், ராதா கிருஷ்ணஷா, பால்ஆசீர், இ.எம்.ஜெயக்குமார்.
ஆவடி அய்யார் பவன் அய்யாத்துரை, ஆர்.கே.எம். துரைராஜன், வேலுசாமி, மனோகரன், அம்பத்தூர் ஹாஜி முகம்மது, தங்கதுரை, மீரான், தேசிகன், சின்னவன், ஆர்.எம். பழனி யப்பன், சுப்பிரமணியன், கந்தன்சாவடி தொழில் அதிபர் வில்சன், கர்ணன், செந்தில், கே.ஏ.மாரியப்பன், ஷேக் முகைதீன் உள்பட பல்வேறு வணிக சங்க தலைவர்கள் பங்கேற்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உண்ணா விரதத்தை இன்று மாலை புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் முடித்து வைக்கிறார்.
கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரதத்தில் மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன் மற்றும் மண்டல மாவட்ட தலைவர்கள், நிர் வாகிகள் பங்கேற்றனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.
சமூக விரோத செயல்கள் நடைபெறும் வாய்ப்புக்கள் உள்ளது. வர்தா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பதில் வருமாறு:-

தற்போது இங்கு கண்காட்சிகள் நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்கி வருகிறது. சமீபத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துறையின் மானிய கோரிக்கை வரும்போது வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பது தொடர்பான முழு விவரங்கள் அறிவிக்கப்படும்’’ என்றார். #TNAssembly #TNMinister #KadamburRaju