என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vani Bhojan"

    • சட்னி சாம்பார் தொடர் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.
    • யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி - சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

    அந்நிகழ்வில்

    நடிகை வாணி போஜன் பேசியதாவது…

    ராதா மோகன் சாருடன் நான் இரண்டாவது முறையாக வேலை பார்க்கிறேன், சட்னி சாம்பார் சீரிஸ் மிக அற்புதமாக வந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ. என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் எனது அன்புகள். இந்த சீரிஸ் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், அனைவருக்கும் என் நன்றிகள்.

    இயக்குநர் ராதா மோகன் பேசியதாவது...

    திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள். அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்தஎன்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
    • கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார்.

    விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

    இது தவிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிற்கப்பட்டது. தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஷ்ணு அதை பதிவிட்டு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இப்படத்தை அறிமுக இயகுனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இது ஒரு போலிஸ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்கவுள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நட்பு ரீதியாக ஒரு நடிகருடன் பழகினால் அவரோடு தொடர்பு இருப்பதாக பேசுகின்றனர்.
    • நான் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் என்னை இணைத்து பேசி விட்டனர்.

    தமிழில் ஓர் இரவு படத்தில் அறிமுகமான வாணி போஜன் தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகைகள் பற்றி தவறாக பேசுவதாக வாணி போஜன் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "சமூக வலைத்தளத்தில் என்னைப் பற்றி வரும் கேலிகளும், வதந்திகளும் எனக்கு அழுத்தம் கொடுக்கவே செய்தன. ஒரு பெரிய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டதாக ஒரு தகவல் வெளியானது.

    அதை பார்த்து பலரும் என்னிடம் துக்கம் விசாரிப்பதுபோல் கேட்டனர். அந்த படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா? எதற்காக உங்களை நீக்கினார்கள்? என்றெல்லாம் விசாரித்தனர். இதுபோன்ற அழுத்தங்கள் நடிகைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது.

    நடிகைகள் பட வாய்ப்புகள் பெற்றால் அதுகுறித்தும் தவறாக பேசுகிறார்கள். நட்பு ரீதியாக ஒரு நடிகருடன் பழகினால் அவரோடு தொடர்பு இருப்பதாக பேசுகின்றனர். நான் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் என்னை இணைத்து பேசி விட்டனர். இதுபோன்ற வதந்திகளாலும், கேலிகளாலும் நடிகர்களை விட நடிகைகள்தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்'' என்றார்.

    • ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் வாணி போஜன்.
    • சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட வாணி போஜனிடம் கவர்ச்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், 'ஓ மை கடவுளே' படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இருந்தபோதிலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. இதையடுத்து தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்க தயார் என வாணி போஜன் முடிவெடுத்தார்.

    வாணி போஜன்

    வாணி போஜன்

     

    இதனைத்தொடர்ந்து தனது கவர்ச்சியான படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

    வாணி போஜன்

    வாணி போஜன்

     

    இதற்கு பதில் அளித்த அவர், "கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்கிறார்கள். காலத்துக்கு ஏற்றபடி நம் சிந்தனையும் மாறவேண்டும்" என்றார். இவரின் இந்த கருத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

    • அறிமுக இயக்குனர் மார்க் ஜோயன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேசினோ.
    • இதில் வாணி போஜன், மதம்பட்டி ரங்கராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சியாக அமைந்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் மார்க் ஜோயன் இயக்கத்தில் வாணி போஜன் நடித்துள்ள படம் கேசினோ. இந்த படத்தில் மதம்பட்டி ரங்கராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


    கேசினோ

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் வாணி போஜன், ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
    நடிகைகளில் தொலைக்காட்சியில் அறிமுகமாகி பெரிய திரையில் பரபரப்பாக இருப்பவர்களில் முக்கியமானவர் வாணி போஜன். இவர் இளம் கதாநாயகர்களுடன் அதிக படங்களில் ஒப்பந்தமாக்கியிருக்கிறார். சமீபத்தில் சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார். 

    வாணி போஜன்

    நிகழ்வில் நடிகை வாணி போஜன் பேசியபோது, “இன்று இந்த குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். இந்த தீபாவளியை இது போல் ஆதரவற்றவர்களுடன் எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    நிதின் சத்யா தயாரிப்பில் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vaibhav #VenkatPrabhu
    வைபவ் நடிப்பில் `ஆர்.கே.நகர்' மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர `காட்டேரி', `சிக்ஸர்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துமுடித்துள்ளார்.

    தற்போது நிதின் சத்யாவின் ஷ்வேத் குரூப்பின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் வைபவ் நாயகனாக நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வைபவ், ஈஸ்வரி ராவ் இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில், ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க, நிதின் சத்யா - வைபவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் வில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

    சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Vaibhav #VenkatPrabhu

    டி.வி.சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வாணி போஜன் சிக்சர் படத்தில் இணைந்துள்ளார். #VaniBhojan
    சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மா.கா.பா.ஆனந்தும் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகிகளில் பிரியா பவானி சங்கரும் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

    தற்போது மற்றொரு கதாநாயகி சின்னத்திரையிலிருந்து அறிமுகமாக உள்ளார். சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வாணி போஜன் வைபவ் நடிக்கும் சிக்சர் படத்தில் இணைந்துள்ளார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் பலாக் லால்வாணி வைபவக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வாணி திரையுலகில் நுழைகிறார்.

    சஸ்பென்ஸ் திகில் படமாக உருவாகும் இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார். படத்தில் இணைந்தது குறித்து வாணி போஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பழைய நண்பர் நிதின் சத்யா. அவரால் இந்த அறிமுகப் படம் கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் வைபவ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். #VaniBhojan
    ×