என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Vijay Hazare"
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
- அனைத்து வீரர்களும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதற்கும் முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இழந்து இருந்தது. தொடர் தோல்விகள் காரணமாக இந்திய அணி ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், அனைத்து வீரர்களும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற விதிமுறையும் அடங்கும். மிக அத்தியாவசியமான சில காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன், விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் பங்கேற்காதது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டிக்கு முன்பாக நடந்த முகாமில் சஞ்சு சாம்சனால் பங்கேற்க முடியாததால் அவரை கேரள கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்யவில்லை.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து தேர்வாளர்களும் வாரியமும் மிகத்தெளிவாக உள்ளன. கடந்த ஆண்டு அனுமதி பெறாமல் உள்நாட்டுப் போட்டிகளை தவற விட்டதற்காக இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மத்திய ஒப்பந்தங்களை இழந்தனர்.
சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே போட்டியைத் தவறவிட்டதற்கான எந்த காரணத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம், தேர்வாளர்களுக்கு வழங்கவில்லை. அவர் துபாயில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். தேர்வு குழுவினர் ஒரு சரியான காரணத்தை விரும்புவார்கள். இல்லையென்றால் ஒருநாள் போட்டிக்கு அவரைப் பரிசீலினை செய்வது கடினமாக இருக்கும்.
கேரள கிரிக்கெட் சங்கத்துடன் சாம்சனுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அதை சரிசெய்ய வேண்டும். மாநில சங்கத்திற்கும் அவருக்கும் இடையே தவறான புரிதல் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சஞ்சு சாம்சன் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால் அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
- உலகளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இது முதல் முறை.
- இத்தொடரில் தொடர்ந்து 5 சதமடித்து தமிழக கிரிக்கெட் அணி வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரு:
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன்மூலம் தமிழக அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர். தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்தன.
ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும்.
இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.