என் மலர்
நீங்கள் தேடியது "violation of opposition"
மயிலாடுதுறை:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 13 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முயற்சித்தது. மக்களின் போராட்டத்தால் மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடியவில்லை.
இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் நேற்று 2 டாஸ்மாக் மதுபானக்கடைகள் அதிரடியாக திறக்கப்பட்டன. ஸ்டேட் பேங்க் ரோடு மற்றும் ரெயிலடி ஆகிய இடங்களில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 4 டி.எஸ்.பிக்கள் தலைமையில், 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100 போலீசாரின் பாதுகாப்புடன் விற்பனை தொடங்கியது.
ரெயிலடியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கடைகளை அடைத்து போராட்டம் நடத்திய வணிகர்கள் மற்றும் பா.ம.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தி.மு.க.வினர் புதிய டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவில்லை என்றால் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.