என் மலர்
நீங்கள் தேடியது "VIRALIMALAI"
- நீராவி மூலம் சிலிண்டர் குளிர்விக்கப்பட்டது.
- போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் பெருமாள் கோவில் கிழக்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சவுமியா நாராயணன். இவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று இரவு திடீரென்று தீ பிடித்தது.
சமையல் அறையில் தீ பிடித்ததால் அங்கிருந்த சிலிண்டரும் வெடித்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமாயின. சவுமியா நாராயணன் உள்ளிட்ட வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்தனர்.
இதனிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி மகேந்திரன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் நீராவி மூலம் சிலிண்டர் குளிர்விக்கப்பட்டது.
வீட்டில் இருந்த மற்றொரு காலி சிலிண்டர் வெளியே கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தினால் எவ்வித உயிர் சேதமோ எவருக்கும் தீக்காயமும் ஏற்படவில்லை. வீட்டின் மேற்கூரை ஓடுகள் சேதமாயின. மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தீ விபத்து நடைபெற்ற பகுதியை டி.எஸ்.பி. முத்துராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விராலிமலை முருகன் கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நவராத்திரி நிறைவு நாளையொட்டி நடந்தது
புதுக்கோட்டை
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து மலைமேல் உள்ள நவராத்திரி கொழு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்ற வந்தது. தினமும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு நேற்று முருகபெருமாள் சமேத வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்புஎய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோவில் முருக பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து, அஷ்டமாசித்திகளை வழங்கி, திருப்புகழ் பாட சொல்லி அதன்படி, அருணகிரிநாதர் முருகனை பற்றி பாடியதும், நாரதருக்கு பாவ விமோசனம் தந்த கோவிலாகவும் விளங்குகிறது.
இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவானது கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலைமேல் உள்ள முருக பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் நாகம், சிம்மம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முருக பெருமான் கோவில் கீழ ரதவீதியில் நேற்று மாலை 6 மணியளவில் எழுந்தருளினார்.
அங்கு சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமகாவும், தன முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை முருக பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி தன்னுடன் ஆட் கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட் கொண்டார். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் முருக பெருமானுக்கு ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து முருகனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பால், லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை முருக பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கண்ணன் தலைமையில், கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிரட்டல் விடுத்ததாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று விராலிமலையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் திமுகவின் போராட்டத்திற்கு எதிராக அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இரண்டு கட்சிகள் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் போராட்டம் நடத்துவதற்கு இரு தரப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK