என் மலர்
நீங்கள் தேடியது "Virender Sehwag"
- பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும்.
- இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்றிரவு நடத்திய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அவுட் ஆனது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தீபக் சாஹர் பந்து வீச்சில் இஷான் கிஷன் பேட்டை உரசுவது போல் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை.
நடுவர் இஷான் கிஷன் வெளியேறியதையடுத்து யோசித்து கொண்டே அவுட் கொடுத்தார். ஆனால் இஷான் கிஷன் ரிவ்யூவும் கேட்காமல் பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரியவந்தது. களநடுவர் மற்றும் இஷான் கிஷனின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும். அது மூளை மங்கிப்போனதைத்தான் குறிக்கிறது. இஷான் கிஷன் குறைந்த பட்சம் நடுவர் தனது முடிவை எடுக்கும் வரை காத்திருக்கலாம். நடுவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அதற்காக அவர் பணமும் வாங்குகிறார்.
இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து பேட்டில் பட்டிருந்தால் கூட அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் இல்லை. நடுவரும் உறுதியற்றவராக இருந்தார். ஆனால் திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது.
என்று கூறினார்.
- யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும்.
- ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும்.
மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. இவர் தற்போது மோசமான பார்மில் உள்ளார். பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக தொடங்கிய ரோகித் சர்மா, 3 சிக்சர்களை விளாசியதால் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் 16 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த சீசனில் ரோகித் சர்மா இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
இந்நிலையில் இந்த சீசனோடு ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறியதாவது:-
ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போது ரோகித் சர்மா விலகுவது நல்லது. ஏனென்றால் வரும் காலங்களில் ரசிகர்களே, போதும்.. ஓய்வு பெறுங்கள் என்று கூற தொடங்கிவிடுவார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். அவர் ஒவ்வொரு சீசனில் 500 முதல் 700 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரரும் அல்ல. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது, பவர் பிளேவில் அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ரன்களை சேர்க்கவில்லை என்றால், அவரின் இத்தனை நாட்கள் கட்டி காத்த லெகசி பாதிப்படையும்.
யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும். நான் விளையாடும் போது, பார்மில் இல்லாத போது சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் கொஞ்சம் நிதானமாக விளையாடுமாறு கூறியுள்ளனர். அதனை ரோகித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும்.
என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
- என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார்.
- இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் முன்னாள் ஆர்சிபி வீரரும் தற்போது குஜராத் அணியின் வீரரான முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் சிராஜ் உண்மையில் பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்கவில்லை இந்திய அணிக்கு கொடுத்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ஏதோ ஒரு வகையில் அவர் மனதளவில் காயத்தைச் சந்தித்துள்ளார். அதனால் அவருக்குள் நெருப்பு உருவாகியுள்ளது. அந்த நெருப்பை நான் பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்.
என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் தற்போது எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார். இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.
சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் அவர் தனது சாதனையைத் தக்க வைத்துக் கொண்டார். தனது முதல் 3 ஓவர்களில் அவர் 12 - 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் 4-வது ஓவரை வீசியிருந்தால் அவர் 4-வது விக்கெட்டை எடுத்திருப்பார். பிட்ச்சில் கிடைத்த உதவியைப் பயன்படுத்தி அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து அசத்தினார்.
என சேவாக் கூறினார்.
- ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது.
- ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.
நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் நிலையில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது.
அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் சுமாராக செயல்படாத ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டதில்லை. இருப்பினும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சொதப்பலாகவே செயல்பட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன், ரிஷப் பந்திடம் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சில கேள்விகளை கேட்டார்.
Rishabh Pant interview with Harsha Bhogle before 3rd ODI against NZ talking about rain, batting position, stats and scrutiny over T20i performance & WK drills. #NZvINDonPrime pic.twitter.com/TjOUdnPTCz
— S H I V A M 🇧🇷 (@shivammalik_) November 30, 2022
ஹர்ஷா போக்லே கேள்வி: வீரேந்தர் சேவாக் டெஸ்டில் அதிரடி காட்டி டி20, ஒருநாள் போட்டிகளில் சொதப்பியபோது, அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார். உங்களிடமும் இதே கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
ரிஷப் பந்த் பதில்: சார், ரெக்கார்ட் என்பது வெறும் எண்கள்தான். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.
ஹர்ஷா போக்லே கேள்வி: நான் உங்களது ஒருநாள், டி20 ரெக்கார்ட் சரியில்லை எனக் கூறவில்லை. உங்களது டெஸ்ட் ரெக்கார்ட்டைவிட, ஒருநாள், டி20 ரெக்கார்ட் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறேன்.
ரிஷப் பந்த்: ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது. இப்போதே சேவாக் உடனும், எனது டெஸ்ட், ஒருநாள் ரெக்கார்ட்டை எப்படி ஒப்படுருகிறீர்கள். இப்போதே ஒப்பிடுவது சரியான கேள்வி தானா? 30-32 வயதாகட்டும். அதன்பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.
இப்படி இருவருக்கும் இடையிலான உரையாடல் அனல் பறந்தது.
- வங்காள தேச அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை
- 2-வது போட்டிகளில் இலக்கை எட்ட முடியாமல் 5 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா- வங்காள தேச அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.
மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 39 பந்தில் 38 ரன்கள் சேர்க்க, வங்காள தேசம் கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்தது.
நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 69 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்திருந்தது. அதன்பின் மெஹிது மெஹ்முதுல்லா ஜோடி அபாரமாக விளையாடியது, மெஹிதி சதம் அடிக்க வங்காளதேசம் 271 ரன்கள் குவித்துவிட்டது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 266 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் இந்திய வீரர்களின் ஃபார்ம் குறித்து சேவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் ''நம்முடைய பெர்ஃபார்மன்ஸ் கிரிப்டோ கரன்சியை விட வேகமாக சரிந்து விட்டது. அதில் இருந்து மீண்டு வர வேண்டியது அவசியம். எழுந்திருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
- சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய ஃபீல்டிங் செட்டப்களை கொண்டு வருவதில் இந்தியா பிரபலமாக உள்ளது.
- அனைவரும் முன்னேறி வரும் சூழலில் இந்தியா மட்டும் பழைய முறையிலேயே உள்ளது.
டாக்கா:
இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே மிகவும் பழைய ஃபார்முலாவை பயன்படுத்தி வருவதாக முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வங்கதேச அணியுடனான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2 - 0 என தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்களை குவித்தது.
இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்தியாவின் ஃபார்ம் மிக மோசமாக இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தோற்ற இந்தியா, சீனியர்களுடன் விளையாடியும் வங்கதேசத்திடம் வீழ்ந்தது.
குறிப்பாக விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் ஏமாற்றியதால் ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பேசியுள்ளார்.
சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய ஃபீல்டிங் செட்டப்களை கொண்டு வருவதில் இந்தியா பிரபலமாக உள்ளது. ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட் என்று வரும்போது இந்தியாவின் அணுகுமுறை மிக மிக பழமையானது. அனைவரும் முன்னேறி வரும் சூழலில் இந்தியா மட்டும் பழைய முறையிலேயே உள்ளது.
இங்கிலாந்தின் நடவடிக்கை 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பின்னர் அவர்களின் அணியில் பல கடினமான முடிவுகளை எடுத்தனர். இதனால் சில ஆண்டுகளிலேயே இங்கிலாந்து அணி நல்ல மாற்றங்களை கண்டது. எனவே இந்தியாவும் அது போன்ற கடின முடிவுகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் வந்ததில் இருந்து இந்தியா ஒரு முறை கூட டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக 50 ஓவர் கிரிக்கெட்டிலும் பெரிய வெற்றிகளை பெறவில்லை. நமது தவறுகளில் இருந்து எதையுமே அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. எனவே உடனடியாக அணுகுமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என வெங்கடேஷ் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கு முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் ஆதரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " இந்தியா தூக்கத்தில் இருந்து கண்விழிக்க வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா- வங்கதேசம் இடையே அடுத்ததாக 3வது ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 10ம் தேதியன்று சட்டோகிராம் நகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வின் அருமையான இன்னிங்ஸ் ஆடினார்.
- ஷ்ரேயாஸ் அய்யருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார்.
தமிழக வீரர் அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் விஞ்ஞானி என அழைத்து பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
அஸ்வின் அருமையான இன்னிங்ஸ் ஆடினார். ஸ்ரேயாஸ் அய்யருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார். இதை செய்தது விஞ்ஞானி. எப்படியோ நமக்கு வெற்றி கிடைத்து விட்டது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சேவாக் இதே நாளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முச்சதம் அடித்தார்.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008-ம் ஆண்டு இதே நாளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தார்.
The Roar of Viru Pa at Anbuden! ???
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2023
Do you remember this day? ??#WhistlePodu #Yellove ??pic.twitter.com/6Rz12nqZ30
அதனை நினைவு கூறும் வகையில் சிஎஸ்கே அணியின் டுவிட்டர் பக்கத்தில் அவர் முச்சதம் அடித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அன்புடென்-ல் சேவாக் கர்ஜித்த தருணம் என்று தலைப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சேவாக் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விராட் கோலி - கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல.
- தோற்றவர்கள் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்.
புதுடெல்லி:
சமீபத்தில், லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மைதானத்தில் நடந்த சம்பவத்தை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை விடுத்து வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு மோதல் போக்கை கடைப்பிடித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.
இந்த நிலையில், மைதானத்தில் விராட் கோலி - கம்பீர் இடையேயான மோதல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்:-
விராட் கோலி - கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல. தோற்றவர்கள் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்.
வெற்றி பெற்ற அணி கொண்டாட வேண்டும். ஏன் வார்த்தை போரில் ஈடுபட வேண்டும்?. இவர்கள் இருவரும் இந்தியாவின் அடையாளங்கள். இது போன்ற செயல்களால் இவர்களை பின் தொடரும் பல கோடி இளைஞர்கள், சிறார்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
- ரோகித் களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார்.
- அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.
மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. இதுவரை பதிவு செய்த 5 வெற்றிகளுமே பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் கிடைத்து என்றால் மிகையாகாது.
இந்த சீசனில் நடந்த 10 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 9 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் டெக்னிக்கல் அளவில் எந்த தடுமாற்றமும் இல்லாத நிலைமையில் மனதளவில் பிரச்சனை இருப்பதே ரோகித் சர்மா இப்படி தருமாறுவதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார். அவரிடம் மனதளவில் ஏதோ ஒரு தேக்கம் இருக்கிறது. ஏனெனில் தற்போது அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே அதற்கு ஒரே தீர்வாக ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினால் பெரிய ரன்களை எடுத்து முந்தைய போட்டிகளில் செய்த சொதப்பலை அவரால் ஈடு செய்ய முடியும்.
என்று சேவாக் கூறினார்.
- ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.
- இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக ரஷித்கான் மாறியுள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னை அணியில் பேட்டிங் வரிசை தரமாக அமைந்தாலும் பந்துவீச்சு சொல்லுபடியாக இல்லை. அதே வேளையில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பகுதிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
குஜராத் அணியின் பேட்டிங்குக்கு முக்கியமாக கருதப்படுவர் சுப்மன் கில். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ரஷித்கான் மற்றும் முகமது சமி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் அவர்கள் இருவரும் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
இந்நிலையில் குஜராத் அணியின் துருப்பு சீட்டு ரஷித் கான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத் அணிக்கு ரஷித் கான் தான் துருப்புச்சீட்டு. குஜராத் அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் ரஷித் கானை தான் அழைத்து வருகிறார்கள். ஹர்த்திக் பாண்ட்யா ரஷித் கானை பயன்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.
அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். அதுபோல சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அவர் அதிக அளவில் நெருக்கடி கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
- நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை.
- ஒரு வெளிநாட்டு வீரர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும்.
மும்பை:
16வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.
சென்னையை வீழ்த்தி குஜராத் கோப்பையை தக்க வைக்குமா அல்லது குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக சென்னை கோப்பையை வெல்லுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதாக தனக்கு தெரிந்த 5 டாப் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.
நான் முதலாவதாக ரிங்கு சிங்கை தேர்வு செய்கிறேன். நான் இவரை முதலில் ஏன் தேர்வு செய்தேன் என யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முன்னர் 5 சிக்சர்களை அடித்து யாரும் அணியை வெற்றி பெறச்செய்யவில்லை என நினைக்கிறேன்.
இரண்டாவதாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிவம் துபேவை தேர்வு செய்கிறேன். அவர் 33 சிக்சர்களை அடித்துள்ளார். மேலும், அவரது ஸ்டிரைக் ரேட் 160 ஆக உள்ளது. அவருக்கு கடந்த சில சீசன்கள் எதிர்பார்த்த படி அமையவில்லை. ஆனால் இந்த வருடம் அருமையாக செயல்பட்டுள்ளார். மூன்றாவதாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரது அருமையான பேட்டிங் திறமை என்னை அவரை எடுக்க வைத்தது.
இதையடுத்து 4-வதாக சூர்யகுமார் யாதவ். ஏனெனில் அவர் ஐபிஎல் தொடங்கும் போது சிறந்த பார்மில் இல்லை. சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார். ஐபிஎல் தொடரில் கூட தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்கடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக நான் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
ஏனெனில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நான் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்கிறேன். அது ஹென்ரிச் க்ளாசென் . ஒரு வெளிநாட்டு வீரர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.