search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "volunteers protest"

    • சீமானிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது.
    • என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன என்றார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது. அதன்பின், சீமான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது வேண்டாத வேலை. வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்கக் கூடாது என சட்டம் உள்ளதா?

    கடந்த ஆண்டு 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த முறையும் கேட்கப்பட்டது.

    புதிய கேள்விகள் ஒன்றுமில்லை. என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன.

    காவல் நிலையத்திற்கு தாமதமாக வர போலீசாரே காரணம்.

    முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் என்னை விசாரணைக்கு அழைக்க தாமதித்தனர்.

    பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது.

    என்னை முதல்வராக்காமல் ஓயமாட்டார்கள்.

    பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? விரும்பி பாலியல் உறவு வைத்துக்கொண்டவர் நடிகை தான். நடிகையுடன் ஏற்பட்ட உறவு திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. நடிகையுடன் 6 அல்லது 7 மாதங்கள் தான் பழக்கம் இருந்தது.

    கஷ்டத்தில் இருந்த போது நடிகையால் எனக்கு எப்படி ரூ 60 லட்சம் தர முடியும்? நடிகை என்னை காதலித்திருந்தால் இப்படி முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி.

    விஜயகாந்த் போன்று எனக்கு சினிமா பின்புலம் இல்லை, ஆனால் மக்கள் என்னை அங்கீகரித்திருக்கிறார்கள்.

    மாண்புமிகு ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    பேட்டி முடிந்ததும் காரில் வீடு புறப்பட்ட சீமான், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தபடி சென்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #Congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



    தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜெயக்குமார் நிறுத்தப்பட்டு உள்ளார்.

    இதற்கிடையே, சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று தொண்டர்கள் கூடினர். 

    அவர்கள் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Congress
    ×