என் மலர்
நீங்கள் தேடியது "weatherman pradeep john"
- 'எல் நினோ' என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு
- கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது
'எல் நினோ' கால நிலை முடிவுக்கு வந்தது. வரும் தென்கிழக்கு பருவமழைக்குப் பின் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'எல் நினோ' என்பது பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பின் எதிரொலியாக, உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. இதனால் அதீத மழை, திடீர் புயல், கடுமையான வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்
கடந்த மே மாதம் வரை மேட்டூர் அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்தது. தென்மேற்கு பருவமழை மிக அதிகமாக பெய்தால் மட்டுமே காவிரியில் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது.
மழை பொழிவு குறைவுக்குக் காரணம் எல் நினோ என்று கூறப்பட்டது. எல் நினோ சில நேரங்களில் வறட்சியையும் சில நேரங்களில் வெள்ளத்தையும் கொடுக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பொழிவு சரியாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் நிரம்பவில்லை. 40 அடிக்கும் கீழே சரிந்தது. அணை நீர் திறப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து படிப்படியாக உயர்ந்து 65 அடி வரை எட்டியது தற்போது குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பங்கு தண்ணீரை தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இந்த ஆண்டு கர்நாடகா வறட்சியை சந்தித்துள்ளதாக அங்குள்ள ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் எல் நினோ முடிவுக்கு வந்து விட்டதாக பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
அவர் தனது X பக்கத்தின் பதிவில் "எல் நினோவிற்கு குட் பை. வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" என்று பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
Goodbye to elnino (u can see the decaying). All the water problems in Cauvery would be solved in the coming SW monsoon.
— Tamil Nadu Weatherman (@praddy06) February 29, 2024
Elnino over the past 30 years. pic.twitter.com/IA03NQtLa8
- சென்னையை நோக்கி மழைமேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
- புயல் கடலில் இருக்கும்வரை திடீரென மழை மேகங்களை நிலத்தை நோக்கி தள்ளும்.
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னையை நோக்கி மழைமேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. புயல் கடலில் இருக்கும்வரை திடீரென மழை மேகங்களை நிலத்தை நோக்கி தள்ளும். குறிப்பாக புயல் கரையை கடக்கும் நிகழ்வு இன்று நடைபெறாமல் நாளை கரையை கடக்கும்" என கூறியுள்ளார்.
- திருவண்ணாமலையில் நேற்றில் இருந்து இன்று வரை 370 மி.மீ. மழை பெய்துள்ளது.
- பெஞ்சல் புயல் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூர், தர்மபுரிக்கு சென்று கன மழையை கொடுக்கும்.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.
அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலினால் இதனையடுத்து தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "திருவண்ணாமலை நகரத்தில் ஃபெங்கல் மையம் கொண்டுள்ளது. அதனால் திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்துள்ளது. நேற்றில் இருந்து இன்று வரை அம்மாவட்டத்தில் 370 மி.மீ. மழை பெய்துள்ளது.
இனி ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூர், தர்மபுரிக்கு சென்று கன மழையை கொடுக்கும். பின்னர் கர்நாடகாவுக்கு சென்று கன மழையை கொடுக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.