search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman candidate"

    • காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார்.
    • பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள பட்டியலில் கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண் வேட்பாளர்.

    51 சதவீதம் பெண்கள் கொண்ட கேரள மக்கள் தொகையில், ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று அகில இநதிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் கேரளாவில் உள்ள கட்சித் தலைவர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டம் நிறை வேற்றப்பட்ட பிறகும், மாநிலத்தில் ஒரு பெண் வேட்பாளரை மட்டுமே கட்சி நிறுத்தியுள்ளது. அதுவும் ஆலத்தூர் தனித் தொகுதி என்பதால் மட் டுமே ரம்யா ஹரிதாசுக்கு சீட் கிடைத்துள்ளது. இல்லை யென்றால் அவரும் கைவிடப்பட்டு இருப்பார்.

    வேட்பாளர்களை இறுதி செய்யும்போது தலைவர்கள், பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்திருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களில் பெண்களை நிறுத்தியிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் 2 பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த முறை ஒருவர் மட்டுமே களத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. கேரளாவில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் கொண்ட பாரதிய ஜனதாவின் ஆரம்ப பட்டியலில் 3 பெண் வேட்பாளர்களும், எல்.டி.எப். அறிவித்த 20 வேட்பாளர்களின் பட்டியலில் 2 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் பத்மாஜா வேணுகோபால், தான் புறக்கணிக்கப்படுவதாக கூறி காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைந்த நிலையில், ஷாமாவின் கருத்து தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இது தொடர்பாக காங் கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகி ஓருவர் கூறுகையில், ஷாமா புகார் அளிக்கவில்லை. பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பெண்களின் வாக்குகள் மற்ற கட்சிகளுக்குச் செல்கிறது என்றும், அவர்களை திரும்ப பெற கட்சிக்கு அதிக பெண் வேட்பாளர்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.

    கரூர் அருகே தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் பெண் வேட்பாளரை கத்தியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க.வினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #ADMK
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் லிங்கமநாயக்கன்பட்டியில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பெண்கள் சிலர் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். தகாத வார்த்தைகளாலும் பேசினர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர்.

    அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 பேரும் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 2 பேரையும் மீட்டு பள்ளப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனிடையே தரக்குறைவாக பேசியதுடன், வேட்பாளருடன் வந்தவர்களை தாக்க வந்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் நள்ளிரவில் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர்.

    பின்னர் வேட்பாளர் ஜோதிமணி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அரவக்குறிச்சி பகுதி அ.தி.மு.க.வை சேர்ந்த திருமூர்த்தி (வயது 36), பெரியசாமி (26) ஆகியோர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதனிடையே திருமூர்த்தி, பெரியசாமி தரப்பிலும் அரவக்குறிச்சி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தூண்டுதலின் பேரில் தி.மு.க. மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு, லிங்கமநாயக்கன்பட்டி சிவா உள்பட 18 பேர் சேர்ந்து தங்களை தாக்கியதாக புகாரில் தெரிவித்து இருந்தனர்.

    இருதரப்பினர் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். நள்ளிரவில் போலீஸ் நிலையம் முன்பு கட்சியினர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK
    ×