என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's T20 World Cup 2024"

    • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
    • இதுவரை 6 முறை உலகக்கோப்பையை ஆஸ்திரேலுயா அணி வென்றுள்ளது.

    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. இத்தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்ற நிலையில், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி அறிவித்திருந்தது.

    வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நடந்தது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே இருந்தது.

    இதனையடுத்து மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இதில் போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதுவரை 6 முறை உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணியானது, ஏழாவது முறையாக மீண்டும் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

    அதன்படி அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணியின் துணை கேப்டனாக தஹ்லியா மெக்ராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

    அலிசா ஹீலி (கே), டார்சி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், டெய்லா விலேமின்க், ஜார்ஜியா வேர்ஹாம்

    • ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
    • ஓய்வு பெற்ற தியான்ட்ரா டோட்டினிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றிருந்த தியான்ட்ரா டோட்டினிற்கு இடம் கிடைத்துள்ளது.

    ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஸ்டேஃபானி டெய்லர், ஷெர்மைன் காம்பெல், ஷமில கன்னெல் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளுடன், சில இளம் வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி:

    ஹீலி மேத்யூஸ் (கே), ஷெர்மைன் காம்ப்பெல்லே, ஆலியா அலீன், அஃபி பிளெட்சர், அஷ்மினி முனிசார், செடியன் நேஷன், சினெல்லே ஹென்றி, டியான்ட்ரா டோட்டின், கரிஷ்மா ராம்ஹராக், மாண்டி மங்ரு, நெரிசா கிராப்டன், கியானா ஜோசப், ஷமிலா கானல், ஸ்டேஃபானி டெய்லர், ஜைடா ஜேம்ஸ்.

    • அக்டோபர் 4ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
    • மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

    ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    அடுத்த மாதம் 4ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் 9 ஆம் தேதி இலங்கை அணியுடனும் 13 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும் இந்தியா மோதவுள்ளது. அக்டோபர் 20 ஆம்ட தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

    மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 66.64 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும் ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 9-வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது.

    துபாய்:

    இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 9-வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது.

    மொத்தம் நடக்கும் 23 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.114 மட்டுமே. ரூ.340, ரூ.570, 910 விலைகளிலும் விற்கப்படுகிறது. முக்கிய பிரமுகர்களுக்கான சொகுசு டிக்கெட் ரூ.15,930 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐ.சி.சி. இணையதளத்தில் மட்டுமின்றி மைதானத்தில் உள்ள கவுண்ட்டரிலும் டிக்கெட் விற்பனை நடைபெறும். ஒரே நாளில் 2 ஆட்டம் நடக்கும் போது, ஒரு டிக்கெட்டை பயன்படுத்தி இரு ஆட்டத்தையும் கண்டுகளிக்கலாம் என்றும், புதிய தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் போட்டியை நேரில் காண அனுமதி இலவசம் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 தடவை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றன.

    ஷார்ஜா:

    பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியை 2009-ம் ஆண்டு ஐ.சி.சி அறிமுகம் செய்தது. 2 ஆண்டுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 டி20 உலகக் கோப்பை நடைபெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 தடவை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) உலகக் கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன.

    9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை துபாய், ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறுகிறது.

    வங்கதேசத்தில் நடைபெற இருந்த போட்டி அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.

    டி20 உலகக் கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப்பட்டன. அதன் விவரம்:

    ஏ பிரிவு : நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை.

    பி பிரிவு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும்.

    லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    15-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.

    முதல் அரை இறுதி அக்டோபர் 17-ம் தேதியும், 2-வது அரை இறுதி 18-ம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20-ம் தேதியும் நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.

    இதில் ஸ்மிருதி மந்தனா தலைமையில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்திய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் இறுதிப்போட்டியில் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது. முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார்.
    • இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டாஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும், அடுத்து வந்த அன்னேக் போஷ் 18 ரன்னிலும், மரிசான் கேப் 26 ரன்னிலும், சோலி ட்ரையான் 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர்.
    • லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார்.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டாஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும், அடுத்து வந்த அன்னேக் போஷ் 18 ரன்னிலும், மரிசான் கேப் 26 ரன்னிலும், சோலி ட்ரையான் 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 19.2ஓவரில் 3 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

    • ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 40 ரன் எடுத்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களம் இறங்கினர்.

    இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதில் அலிசா ஹீலி 26 ரன்னிலும், பெத் மூனி 40 ரன்னிலும் அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 30 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் ரன் எடுக்காமலும், ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.
    • இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன.

    துபாய்:

    9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இலங்கையை நாளை (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும். இலங்கையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலிவர்மா, தீப்திசர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 31 ரன் வித்தியாசத்திலும், 2-து போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவுஇல்லை.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. ஸ்காட்லாந்து 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    • இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அத்துடன் ரன்ரேட்டிலும் ஏற்றம் காண வேண்டியது முக்கியம்.

    இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் சந்தித்ததில் 4 ஆட்டத்தில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இலங்கையும் வென்று இருப்பதும் இதில் அடங்கும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 43 ரன்னும் லாரா வோல்வார்ட் 40 ரன்களும் எடுத்தனர். நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோராகும்.

    இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
    • இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது.

    10 அணிகள் இடையிலான 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் (ஏ பிரிவு) மோதியது.

    இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது.

    இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது. ஏ பிரிவில் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் கடைசி லீக்கில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் சிக்கலின்றி 2-வது அணியாக நியூசிலாந்து அரைஇறுதிக்கு முன்னேறி விடும்.

    பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும். அதாவது இந்திய அணியின் தலைவிதி இப்போது பாகிஸ்தான் கையில் உள்ளது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 11 ஆட்டங்களில் மோதியுள்ள பாகிஸ்தான் அதில் 2-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'இனி எங்கள் கையில் எதுவும் இல்லை. எங்களுக்கு இன்னொரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்' என்றார்.

    ×