என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yarn price"

    • பருத்தி வரத்து குறைவு மற்றும் நூலுக்கான தேவை அதிகரிப்பை அடுத்து நூல் விலை உயர்வு
    • ரூ.220 முதல் ரூ.380 வரை விற்பனையாகி வந்த நூலின் விலை அனைத்து ரகங்களிலும் ரூ.3 அதிகரிப்பு

    திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.178, 16-ம் நம்பர் ரூ.188, 20-ம் நம்பர் ரூ.246, 24-ம் நம்பர் ரூ.258, 30-ம் நம்பர் ரூ.268, 34-ம் நம்பர் ரூ.286, 40-ம் நம்பர் ரூ.306, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.243, 24-ம் நம்பர் ரூ. 253, 30-ம் நம்பர் ரூ.263, 34-ம் நம்பர் ரூ. 276, 40-ம் நம்பர் ரூ.296-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்றம் இல்லாமல் சீராக இருந்தது. இந்நிலையில் திடீரென நூல் விலை ரூ.3 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் அதிர்ச்சிடைந்துள்ளனர்.

    • நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலை யில் கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலையிலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான(ஜூன்) நூல் விலை ஆனது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர். இதன்படி தொடர்ந்து 5 மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    அதன்படி ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது.
    • கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்க வில்லை. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது .ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை.

    மேலும் மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தனி பேரிப்பு அமைத்து மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    மேலும் சிறு, குறு, நிறுவனங்களுக்கான தொழில் ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்ததால் வியாபாரிகள் ஜவுளி வாங்கு வதை நிறுத்திவிட்டனர். எனவே சிறுகுறு தொழில் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இன்று முதல் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது.
    • நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப, நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தன. இதில் நூல் விலையில் மாற்றமில்லை. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதன்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.175, 16-ம் நம்பர் ரூ.185, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.243, 24-ம் நம்பர் ரூ.255, 30-ம் நம்பர் ரூ.265, 34-ம் நம்பர் ரூ.283, 40-ம் நம்பர் ரூ.303, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.240, 24-ம் நம்பர் ரூ. 250, 30-ம் நம்பர் ரூ.260, 34-ம் நம்பர் ரூ. 273, 40-ம் நம்பர் ரூ.293-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×