என் மலர்
நீங்கள் தேடியது "yasin malik"
- நிதி மந்திரியாக முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஹாம்சாத் அக்தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் யாசின் மாலிக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்:
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பதவி காலம் முடிவடையும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதனை அதிபர் ஆரீப்ஆல்வி ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து பாகிஸ்தானில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் வரை பாகிஸ்தானில் இடைக்கால பிரதமராக பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த எம்,பி.யான அன்வருல் ஹக்காகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இடைக்கால மந்திரி சபை பதவி ஏற்றது. நிதி மந்திரியாக முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஹாம்சாத் அக்தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த இடைக்கால மந்திரி சபையில் மனித உரிமை மற்றும் பெண்கள் நல பிரிவின் உதவியாளராக முஷால்ஹூசைன் மவுலிக் என்ற பெண் இடம் பெற்று உள்ளார். இந்த பதவி மந்திரிகளுக்கு இணையான பதவி என்பது குறிப்பிடதக்கது.
முஷால் ஹூசைன் மவுலிக் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் யாசின் மாலிக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி தற்போது பாகிஸ்தான் இடைக்கால மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- ராகுல் ஜி, ஒரு நியாயமான வாய்ப்பு கிடைத்தால் யாசின் மாலிக் ஜம்மு-காஷ்மீரில் அமைதிக்கான சக்தியாக இருக்க முடியும்.
- அமைதி நடவடிக்கைகளில் யாசின் மாலிக்கின் பங்கு முக்கியமானது மற்றும் அவரது அவலநிலை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநில பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக். இவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. பயங்கரவாத குழுவுக்கு நிதி திரட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
யாசின் மாலிக்கிற்காக தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் விவாதத்தை தெடாங்கவும் என அவரது மனைவி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. மேலும், ராகுல் காந்தியின் இதுபோன்ற செயலால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என விமர்சித்துள்ளது.

யாசின் மாலிக் மனைவி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது தொடர்பாக பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறியதாவது:-
ஏன் காங்கிரஸ் எப்போதும் பயங்கரவாதிகளுடன் நிற்கிறது?. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி யாசின் மாலிக்கிற்காக பாராளுமன்றத்தில் விவாதத்தை தொடங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு யாசின் மாலிக் மனைவி கடிதம் எழுதியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.
மாலிக் உள்ளிட்ட பல குற்றவாளிகள் விமானப்படை அதிகாரிகளை காஷ்மீரில் சுட்டுக்கொலை செய்ததற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள். இது மாநிலத்திற்கு எதிரான போருக்கு சமமாகும். டாக்டர் மன்மோகன் சிங் அவரது ஆலோசகராக நியமனம் செய்தார். அப்போது டெல்லி ஊடகங்கள் அவரை 'யூத் ஐகான்' என்று அழைத்தன.
இவ்வாறு அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.
யாசின் மாலிக்கின் மனைவி முஷால் ஹுசைன் முல்லிக் ஆவார். இவர் பாகிஸ்தான் பிரதமரின் மனித உரிமை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான முன்னாள் உதவியாளர் ஆவார்.
30 ஆணடுகளுக்கு முன்பாக தேசத்துரோக வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. யாசிக் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியது, தற்போது சிறையில் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அவரது கணவர் யாசிக் மாலிக் உடல்நலம் தொடர்பாக ராகுல் காநதிக்கு முல்லிக் எழுதிய கடிதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான யாசிக் மாலிக், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் தனக்கு மரண தண்டனை விதிக்க கோரி என்ஐஏ தாக்கல் செய்த மேல்முறையீட்டை எதிர்த்து தானே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிடுகிறார்.
2017-ல் என்.ஐ.ஏ. யாசிக் மாலிக் உள்ளிட்ட பல்வேறு தனிநபர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2022-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருவதால் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது.
யாசின் மாலிக் குறித்து அவரது மனைவி ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாசின் மாலிக் கடந்த 2-ந்தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் அவரது நல்வாழ்வை மேலும் மோசமாக பாதிக்கும் மற்றும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, அகிம்சை கொள்கையில் நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவது சித்திரவதைக்கு குறைவில்லை, அவருக்கு நீதி கிடைக்க எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
மேலும் "ராகுல் ஜி, ஒரு நியாயமான வாய்ப்பு கிடைத்தால் யாசின் மாலிக் ஜம்மு-காஷ்மீரில் அமைதிக்கான சக்தியாக இருக்க முடியும். அமைதி நடவடிக்கைகளில் யாசின் மாலிக்கின் பங்கு முக்கியமானது மற்றும் அவரது அவலநிலை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் இயற்கையான மற்றும் ஒப்பனை அல்லாத அமைதியைக் கொண்டுவருவதற்கான கருவியாக மாறக்கூடிய யாசின் மாலிக் விஷயத்தில் உங்கள் தார்மீக மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி விவாதத்தைத் தொடங்கவும் என நான் உங்களை (ராகுலை) கேட்டுக்கொள்கிறேன்.
ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் யாசின் மாலிக் மனைவி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் 2019-ல் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
பின்னர், யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்த நிலையில் தண்டனையை அறிவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. விசா முறைகேடு விவகாரம்- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.
பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் சட்டப்படி ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக்குக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தீர்மானித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை சமீபத்தில் டெல்லிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், டெல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை விசாரணை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதிவரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பாதுகாப்பு காரணங்கள் கருதி யாசின் மாலிக் தொடர்பான மறுவிசாரணையை டெல்லி திகார் சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்த வேண்டும் என திகார் சிறை நிர்வாகத்தின் சார்பில் இன்று வலியுறுத்தியதால் இதுதொடர்பாக பதிலளிக்குமாறு யாசின் மாலிக் தரப்பு வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. #YasinMalik #JKLFbanned #NIAremand #Tiharjail

