என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yuvan Shankar Raja"

    • பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளர் ஆனார்.
    • இயக்குநர் எலன் உடன் யுவன் சங்கர் ராஜா புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா யு.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குநர் எலன் இயக்கி இருந்தார்.

    இந்த நிலையில், பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் கவின் நடிக்க இருக்கிறார். டாடா படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் இந்த படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. 

    • பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
    • இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.



    அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.

    இந்த நிலையில், பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    ஸ்டார் போஸ்டர்

    அதன்படி, இப்படத்திற்கு 'ஸ்டார்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர். 'ஸ்டார்' படத்தின் புரோமோ ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    2001-ஆம் ஆண்டில் பிரசாந்த் மற்றும் ஜோதிகா நடிப்பில் 'ஸ்டார்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.





    • நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.


    இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'தளபதி 68 படத்தில் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் எலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்டார்’.
    • இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.


    அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் 'பியார் பிரேமா காதல்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.


    'பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு 'ஸ்டார்' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




    • விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
    • வெங்கட் பிரபுவின் பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

     இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி 68 குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு புகைப்படங்களை பகிர்ந்த அவர், "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்" என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக்செய்து பதிவிட்டுள்ளார்.

     இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.


    இந்நிலையில், 'தளபதி 68' படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவன் 'தளபதி 68' படத்தின் முதல் பாடல் தரலோக்கலாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு.
    • பாதுகாப்பு நடவடிக்கைகளில் நான் உட்பட கலைஞர்கள் தீவிரப் பங்கை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த நிகழ்வை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆதரவு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரு கச்சேரியின் அளவிலான நிகழ்வை ஒழுங்கமைப்பது மிகவும் சிக்கலான பணியாகும். இது தளவாடங்கள் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது முதல் போக்குவரத்து மேலாண்மை வரை பல நகரும் பகுதிகளை உள்ளடக்கியது. துரதிர்ஷ்டவசமாக, நிறுவன தவறுகள் உட்பட பல காரணங்களால், கூட்ட நெரிசல் மற்றும் பிற எதிர்பாராத சிக்கல்கள் இதுபோன்ற அளவிலான கச்சேரிகளின் போது நடந்துள்ளன.

    நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி சிந்திப்பது முக்கியம், கலைஞர்கள் என்ற முறையில், நாங்கள் இந்த தயாரிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம். எல்லாமே சீராக நடக்கவும், நாங்கள் மேடையில் இருக்கும்போது எங்கள் ரசிகர்கள் நன்றாகக் கவனிக்கப்படுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை வெளிவருவதைக் காண்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது, மேலும் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நான் உட்பட கலைஞர்கள் தீவிரப் பங்கை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ஒரு சக இசையமைப்பாளர் என்ற முறையில், துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • விஜய் ஆண்டனி மகள் மீரா உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
    • இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இவரது உடல் இன்று கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "விஜய் ஆண்டனியின் இழப்பை நினைத்து வருந்துகிறேன். ஒரு தந்தையாக, விஜய் ஆண்டனி இப்போது என்ன வேதனையை அனுபவித்திருப்பார் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்த தாங்க முடியாத இழப்பை தாங்கும் சக்தியை அந்த குடும்பத்திற்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன்.


    யுவன் சங்கர் ராஜா பதிவு

    நம் அன்றாட வாழ்க்கையிலும், நம் குடும்பம் மற்றும் நட்பு வட்டாரங்களிலும் நம்மைச் சுற்றியுள்ள பலர் அமைதியாக பல்வேறு மன மற்றும் உணர்ச்சி வேதனைகளை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை ஒருவரை நம்பிக்கையற்ற பாதையில் தள்ளலாம் அந்த இருள் சூழ்ந்த தருணத்தில், அவர்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் அழகான எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை மறந்துவிடுவார்கள்.

    வலிமை மற்றும் தைரியத்திற்கு சான்றாக இருக்கும் இந்த சவாலான காலங்களில் உதவியை நாடுமாறு மக்களை குறிப்பாக இளைய தலைமுறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



    • லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது.
    • தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், எத்தனை மணிக்கு டிரைலர் வெளியாகும் என்பது பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 பற்றிய அப்டேட்-ஐ அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    அதில், "உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன் தளபதி 68 துவங்கியது. இது மகிழ்ச்சியான ரோலர் கோஸ்டர் ரைட் ஆக இருக்க போகிறது. லியோ வெளியீட்டை தொடர்ந்து அனைத்து புகைப்படங்கள் மற்றும் இதர அப்டேட்கள் வழங்கப்படும். கடவுள் கருணை மிக்கவர்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    • நடிகர் சதீஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தை செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார்.

    இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'.இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து நடத்தப்படுகிறது.


    கான்ஜூரிங் கண்ணப்பன் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • செல்வின் ராஜ் சேவியர் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான (Nobody Sleeps Here) பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    இதற்கு முன்பு இப்படத்திலிருந்து வெளியான புரொமோவில் யுவன் சங்கர் ராஜாவிடம் நடிகர் சதீஷ் தூங்காமல் இருக்கா பாட்டு போட்டு தரும்படி கேட்டிருப்பார்.



    • ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘ஜோ’.
    • இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் 'ஜோ'. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சீனுராமசாமி, "இந்த படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குனர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரொமோஷனுக்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது.


    படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் 'ஜோ'. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

    ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்" என்றார்.


    மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது, இந்த படத்தின் டிரைலரை அருள் நந்து போட்டு காண்பித்தபோது நன்றாக இருக்கிறது எனது தோன்றியது. புரமோஷன் பாடலுக்காக யுவன் வந்தபோது படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தான் கமிட் செய்த புராஜெக்ட்டை மிகவும் விரும்பி, முழு அர்ப்பணிப்பு கொடுத்து அருள் நந்து செய்துள்ளார். அதற்காகவே இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். 'ஜோ' படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் உங்களை நெகிழ வைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என பேசினார்.

    ×