என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

மேல்மலையனூர் அங்காளம்மன்-தீய சக்திகள் ஓடி விடும்!

- விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது.
- உடனே அந்தப் பெண் அருள் வந்து கூச்சலிடுவாள்.
தீய சக்திகள் ஓடி விடும்
விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது.
பிள்ளைப்பேறு, வேலையின்மை, திருமணப் பிரச்சினை, இப்படிப் பல பிரச்சினைகளுக்கும் குறி பார்ப்பதுண்டு.
அவர்களே அதற்கான பரிகாரமும் கூறுவர்.
பேய் பிடித்த பெண்களைக் கூட்டி வந்து அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து ஈரப்புடவையுடன் கூட்டி வருகிறார்கள்.
அந்நேரம் பூசாரி ஒருவர் அப்பெண் தலை மீது மந்திரக் கோலை வைத்துத் தடவி கபால ஜலத்தைத் தெளிப்பார்.
உடனே அந்தப் பெண் அருள் வந்து கூச்சலிடுவாள்.
பிறகு மேளம் பம்பை முழங்கும்..
பேய் பிடித்த பெண் ஆவேசமாக கத்தியபடி, தலையை விரித்து ஆடத் தொடங்குவாள்.
இப்படி வெறியாட்டம் ஆடி பூசாரியிடமிருந்து செல்லத் துடிப்பாள்.
உடனே பூசாரிகள் கற்பூரம் ஏற்றி அவளிடம் கொடுப்பார்.
அதை அவள் வாயில் போட்டு விழுங்குவாள் அவளிடம், நீ யார், எதற்காக இவளைப் படித்தாய்? என்று பூசாரி கேட்பார்.
இதன் மூலம் அந்த தீய சக்தி பற்றிய விபரம் தெரியும்.
அந்த தீய சக்தியிடம் பேசி உறுதிமொழி வாங்கிக் கொண்டு அதை அங்காளம்மன் துணையுடன் விரட்டி விடுவார்கள்.
அப்புறம் சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதிப்படுகிறாள்.
இதன் மூலம் அந்த பெண் தீய சக்தியிடம் இருந்து விடுப்பதை உறுதி செய்கிறார்கள்.