சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன்

பெண்களை கவரும் பொன்னியின் செல்வன்.. குவியும் ஆர்டர்கள்..

Published On 2022-09-15 07:30 GMT   |   Update On 2022-09-15 07:30 GMT
  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
  • இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


பொன்னியின் செல்வன்

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களை கவரும் விதமாக தற்போது "பொன்னியின் செல்வன்" படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.


பொன்னியின் செல்வன் சேலை

பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த சேலைகளில், "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் போர் வாள்கள் சேலை முழுவதும் நிறைந்து வண்ண மயமாக காட்சியளிக்கிறது. இவை தற்போது விற்பனைக்கு வந்த தகவல் அறிந்து, பெண்கள் பலர் இந்த சேலைகளை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News