கிரிக்கெட்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சுட்டுக்கொலை

Published On 2024-07-17 11:02 GMT   |   Update On 2024-07-17 11:02 GMT
  • இலங்கை U19 அணியின் முன்னாள் கேப்டனாக தம்மிகா நிரோஷனா இருந்தார்.
  • இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரான தம்மிகா நிரோஷனா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை U19 அணியின் முன்னாள் கேப்டனாக அவரை நேற்று இரவு அவது வீட்டில் வைத்து மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிரோஷனாவை கொலை செய்தவர் 12 ரக போர் துப்பாக்கியை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News