ஆன்மிகம்

பூவை விழுங்கும் விநாயகர்

Published On 2017-06-01 14:52 IST   |   Update On 2017-06-01 14:52:00 IST
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் திருத்தலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள விநாயகர் ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் திருத்தலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னிதியில் வலது புறம் சிறிய வடிவிலான விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது.

இந்த விநாயகருக்கு நந்தியாவட்டை மலரின் காம்பை கிள்ளிவிட்டு, நமக்கு நடக்க வேண்டிய காரியங்களை மனதில் நினைத்துக் கொண்டு, விநாயகரின் இரு காதுகளிலும் மலரை வைக்க வேண்டும். நினைத்த காரியம் உடனடியாக நடக்கும் என்றால், பூ வைத்த உடனேயே காது துளை வழியாக உள்ளே சென்று விடும்.

தாமதாக சென்றால் நினைத்த காரியம் தாமதப்படும். பூ உள்ளே செல்லாவிட்டால் காரியம் நடைபெறாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பூவை விழுங்கி, பக்தர்களுக்கு நல்வழி காட்டுவதால், இவரை பக்தர்கள் ‘பூ விழுங்கி விநாயகர்’ என்கிறார்கள்.

Similar News