வழிபாடு

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம்

Published On 2022-12-23 04:08 GMT   |   Update On 2022-12-23 04:08 GMT
  • சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது. இதையொட்டி மாலையில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஸ்ணு சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது.

தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

Similar News