வழிபாடு

பழனி முருகன் கோவிலில் ஜன.27-ந்தேதி கும்பாபிஷேகம்

Published On 2022-12-16 05:20 GMT   |   Update On 2022-12-16 05:20 GMT
  • வருகிற 25-ந்தேதி முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
  • ஜனவரி 18-ந்தேதி பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன.

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது என கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், பழனி தண்டாயுதபாணிசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி காலை 9 மணிமுதல் பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன. ஜனவரி 23-ந்தேதி முதல்கால வேள்வி பூஜைகளும், ஜனவரி 26-ந்தேதி காலை 9.05 முதல் 11 மணிக்குள் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையடுத்து ஜனவரி 27-ந்தேதி காலை 8.30 மணிக்குமேல் 9.30 மணிக்குள் தங்ககோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார். கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அறங்காவலர் குழுவினர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News