வழிபாடு
திருப்புறம்பயம் சாட்சிநாதசாமி கோவிலில் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய,விடிய தேன் அபிஷேகம்

திருப்புறம்பயம் சாட்சிநாதசாமி கோவிலில் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய,விடிய தேன் அபிஷேகம்

Published On 2023-09-19 11:47 IST   |   Update On 2023-09-19 11:47:00 IST
  • ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் விடிய,விடிய தேன் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
  • திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும்.

கபிஸ்தலம்:

திருப்புறம்பயம் சாட்சிநாதசாமி கோவிலில் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய,விடியதேன்அபிஷேகம் நடந்தது.

சுவாமிமலை அருகே திருப்புறம்பயத்தில் சாட்சிநாதசாமி கோவில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் விடிய,விடிய தேன் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய,விடிய தேன் அபிஷேகம் நடந்தது.

இரவு முழுவதும் நடந்த தேன் அபிஷேகத்தில் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியில் ஊற்றப்பட்டது. தேன் அபிஷேக முடிவில் இந்த திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும். வருடத்தில் மற்ற நாட்களில் இந்த விநாயகருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை.

முன்னதாக சூரிய நாராயணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியமும், மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவது ஆன்மிகமே, அறிவியலே பட்டிமன்றம் ஆகியவை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News