இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 16 மார்ச் 2025
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-2 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை மாலை 4.35 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: அஸ்தம் காலை 11.27 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த நாள். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால்குடக் காட்சி. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் வசந்த உற்சவம். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி யம்மன் ஊஞ்சலில் காட்சி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீவாஞ்சியநாத சுவாமிக்கு அபிஷேகம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பெருமை
மிதுனம்-ஆதரவு
கடகம்-நட்பு
சிம்மம்-உதவி
கன்னி-பாராட்டு
துலாம்- அன்பு
விருச்சிகம்-பக்தி
தனுசு- போட்டி
மகரம்-தெளிவு
கும்பம்-உவகை
மீனம்-ஆக்கம்