இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 13 மார்ச் 2025
- இன்று பவுர்ணமி. ஹோலிப் பண்டிகை.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-29 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி காலை 11.39 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம்: பூரம் (முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி. ஹோலிப் பண்டிகை. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கஜேந்திர மோட்சம். திருவொற்றியூர் ஸ்ரீ சிவபெருமான் மகிழடி சேவை. குடந்தை ஸ்ரீ சக்கரபாணி ஸப்தாவர்ணம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் திருமலைராஜன் பட்டிணம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திரு மஞ்சன சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிசு
ரிஷபம்-சுபம்
மிதுனம்-மேன்மை
கடகம்-நற்செயல்
சிம்மம்-தனம்
கன்னி-உழைப்பு
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-நலம்
தனுசு- பெருமை
மகரம்-நன்மை
கும்பம்-வாழ்வு
மீனம்-பயணம்