இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 மார்ச் 2025
- திருவெள்ளாறை ஸ்ரீ கவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் பவனி.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-6 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி நள்ளிரவு 12.02 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: அனுஷம் இரவு 9.02 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. திருவெள்ளாறை ஸ்ரீ கவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிநாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-கடமை
மிதுனம்-சிறப்பு
கடகம்-சுகம்
சிம்மம்-துணிவு
கன்னி-ஆர்வம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-தனம்
தனுசு- முயற்சி
மகரம்-கண்ணியம்
கும்பம்-உறுதி
மீனம்-கவனம்