கால்பந்து

கோல் அடித்த மகிழ்ச்சியில் புகாயோ சகா

செனகலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

Published On 2022-12-04 20:56 GMT   |   Update On 2022-12-04 20:56 GMT
  • முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
  • ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

தோகா:

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது.

செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.

Tags:    

Similar News