பெண்கள் உலகம்

சிசேரியன் செய்த பெண்களுக்கு இடுப்புவலி பிரச்சனை ஏற்படுமா?

Published On 2025-02-02 09:00 IST   |   Update On 2025-02-02 09:00:00 IST
  • கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு.
  • நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.

ஆபரேஷனுக்கு பிறகு 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து இடுப்பு வலி வருகிறது என்றால் அது இடுப்பு எலும்பு, குருத்தெலும்புகளின் தேய்மானம், அதிக உடல் எடை, கடின உழைப்பு, வயதுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் போன்றவை கூட இடுப்பு வலியை ஏற்படுத்தலாம்.

கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு. ஆனால் இந்த அதிகரிக்கும் உடல் எடை உங்கள் தோற்ற நிலையை மாற்றி முதுகு பக்கம் வளைந்து உங்களது வயிற்றுப்பகுதி தசைகளை வலுவிழந்ததாக ஆக்கிவிடுகிறது.


இதனால் உங்கள் இடுப்பெலும்புக்கும், குருத்தெலும்புக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் பின்பக்கமுள்ள தசைகளும், எலும்பு இணைப்புகளும் அதிக எடையினால், அதிக பளுவை பல மாதங்கள் சுமக்க நேரிடுகிறது.

பிரசவத்துக்குப் பிறகு சில பேருக்கு சில காலங்களுக்கு இடுப்பு வலி வந்து பின்பு பூரண குணமாகிவிடுகிறது. ஆனால் சில பேருக்கு இந்த இடுப்பு வலி ஓரிரு ஆண்டுகள் இருந்து பின் சரியாகிவிடுகிறது.

இடுப்பு தசைப்பிடிப்பு, தசை பிறழ்தல், ஜவ்வு இறுக்கம், குருத்தெலும்பு வரிசை சீராக இல்லாமலிருப்பது, கீல் வாத நோய், எலும்பு வலு இழப்பு நோய், மடங்காநிலை முதுகெலும்பு வீக்கம், விபத்து, சதைப்பிடிப்பு, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் பிறழ்தல், நீண்டு, கிழிந்து போதல் போன்றவைகளினாலும் இடுப்பு வலி ஏற்படலாம்.


அதிக எடை தூக்காமல் இருப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடப்பது, முறையாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை கடைப்பிடித்து வருவது நல்லது.


மேலும் இடுப்பு வலி மறைய மருத்துவர் மற்றும் பிசியோதெரபி நிபுணர் ஆலோசனையின் பேரில் அவர்கள் அளிக்கும் மருத்துவம் மற்றும் உடல் இயக்க பயிற்சிகளை செய்வது பலன் தரும்.

Tags:    

Similar News