உள்ளூர் செய்திகள்

மயிலத்தில் 500 வருட பழமையான புளிய மரம் திடீரென எரிந்து சாம்பல்

Published On 2025-03-17 11:33 IST   |   Update On 2025-03-17 11:33:00 IST
  • சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
  • தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இங்கு பழமையான மரங்கள் அதிகம் உள்ளன. இதில் நேற்று இரவு சுமார் 500 வருடம் பழமையான புளிய மரம் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த புளிய மரத்தின் மேல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்திருப்பார்களா? என சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News