தமிழ்நாடு

இறந்தவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- அமைச்சர் சேகர்பாபு

Published On 2025-03-17 09:41 IST   |   Update On 2025-03-17 09:41:00 IST
  • அ.தி.மு.க. ஆட்சியில் திருச்செந்தூர் கோவிலுக்கு செய்தது என்ன?
  • கணவருக்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது என்று அவரது மனைவி கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.

திருச்செந்தூர் கோவிலில் ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட சென்றவர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அ.தி.மு.க. ஆட்சியில் திருச்செந்தூர் கோவிலுக்கு செய்தது என்ன?

* கணவருக்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது என்று அவரது மனைவி கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.

* இறந்தவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News