நம்பிக்கையில்லா தீர்மானம்: பாரபட்சம் காட்டுகிறார் சபாநாயகர்- இ.பி.எஸ்
- சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர்.
- எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை.
சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு தொடங்கியது.
சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு இறங்கினார். துணை சபாநாயகர் அவையை நடத்தினார்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர்.
* மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுகிறார்.
* அதிக நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெற வேண்டும் என வலியுறுத்துவோம். ஆனால் குறைந்த நாட்கள் தான் நடந்துள்ளது.
* கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்வதில்லை.
* எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை.
* அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பேசும்போது பல குறுக்கீடுகள் செய்வதால் முழுமையாக பேச முடியவில்லை. இது ஜனநாயகமா?
* 2 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவித்தார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.