தருமபுரி அருகே வாலிபர் மர்ம சாவு
- நவீன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- போலீசார் நவீன்குமாரின் உடலை கைப்பற்றினர்.
தருமபுரி,
தருமபுரி மா வட்டம், இண்டூர் அருகே உள்ள பச்சையம்மன் கோவில் கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் நவீன்குமார் (வயது 25).
நவீன் குமாருக்கு இதய நோய் இருந்ததால் சமீபத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி நவீன்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நவீன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நவீன் குமார் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.
இந்நிலையில் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக நேற்று கிருஷ்ணன் இண்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இண்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.