உள்ளூர் செய்திகள் (District)

இறந்த கார்த்திகா.

கார்- வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

Published On 2022-11-02 09:37 GMT   |   Update On 2022-11-02 09:37 GMT
  • மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி சென்ற காரும், வேனும் மோதிக்கொண்டன.
  • காயமடைந்தவர்கள் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பேராவூரணி:

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து 6 மாணவ, மாணவிகளுடன் பள்ளி தாளாளர் செய்யது முகமது (வயது 35), ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோராவை சுற்றிப்பார்க்க வந்தனர்.

கடந்த 29-ந் தேதி ஒரு வேனில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் வந்தனர். வேனை பள்ளி தாளாளர் செய்யது முகமது ஓட்டினார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி சென்ற காரும், வேனும் மோதிக்கொண்டன.

இதில் செய்யது முகமது, ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு செய்யது முகமது உயிரிழந்தார். ஆசிரியைகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகள்.இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆசிரியரின் இறப்பு கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சத்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News