உள்ளூர் செய்திகள்

கடத்தூர் அரசு பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு

Published On 2023-09-28 15:23 IST   |   Update On 2023-09-28 15:24:00 IST
  • கடத்தூர் அரசுப்பள்ளியில் டெங்கு காயச்சல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்தனர்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு பெண்கள் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்பு ணர்வு நடைபெற்றது.

இதில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ,பரவும் முறைகள், வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மேற்பார்வையில் , சுகாதார பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு டெங்கு தடுப்பு குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

Similar News