உள்ளூர் செய்திகள் (District)

இரணியல் அருகே வாகனம் மோதி தொழிலாளி சாவு

Published On 2022-09-22 07:07 GMT   |   Update On 2022-09-22 07:07 GMT
  • மகள் சரண்யா நாகர்கோவில் அருகே வசித்து வருகிறார். அவரை பார்க்க வேலப்பன் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றார்
  • எதிர்பாராதவிதமாக வேலப்பன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வேலப்பன் தலையில் பலத்த காயமடைந்தார்.

கன்னியாகுமரி :

கொல்லங்கோடு வள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் வேலப்பன் (வயது 65). இவர் கயிறு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இவரது மகள் சரண்யா நாகர்கோவில் அருகே வசித்து வருகிறார். அவரை பார்க்க வேலப்பன் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றார். இரவு மொட்ட விளை சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வாகனம் வந்தது.

அந்த வாகனம் எதிர்பாராதவிதமாக வேலப்பன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வேலப்பன் தலையில் பலத்த காயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்த னர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வேலப் பன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் சதீஷ் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News