உள்ளூர் செய்திகள் (District)

சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2023-09-27 09:38 GMT   |   Update On 2023-09-27 09:38 GMT
  • சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
  • ராஜேஸ்வரியை பார்த்துவிட்டு பூட்டை கிராமத்திற்கு குமார் மற்றும் சிவசங்கர் புறப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது55) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று உறவினர் ஏழுமலை மகன் சிவசங்கர்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாதவச்சேரியில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரியை பார்க்கச் சென்றார். பின் ராஜேஸ்வரியை பார்த்துவிட்டு பூட்டை கிராமத்திற்கு குமார் மற்றும் சிவசங்கர் புறப்பட்டனர். சிவசங்கர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அப்போது கொசப்பாடி ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது செல்லம்பட்டில் இருந்து பாலப்பட்டு நோக்கி சென்ற டிராக்டர் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சிவசங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News