ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார்
- ஜல்லிக்கட்டில் 750 காளைகள் கலந்து கொண்டன.
- காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு இப்பகுதியைச் சேர்ந்த செங்கவள நாட்டார்களால் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் கலந்து கொண்டன.
காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்ஸி மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களு க்கும் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு பரிசுகள் வழங்கினார். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.