தமிழ்நாடு

வடஇந்தியாவில் எத்தனை தமிழ் பிரசார சபைகள் நிறுவப்பட்டன?- மு.க.ஸ்டாலின்

Published On 2025-03-04 12:03 IST   |   Update On 2025-03-04 12:03:00 IST
  • இத்தனை ஆண்டுகளில் வட இந்தியாவில் எத்தனை உத்தர பாரத தமிழ் பிரசார சபைகள் நிறுவப்பட்டுள்ளன?
  • பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் 3 அல்லது 30 மொழிகளைக் கற்பிக்க விரும்பினால் அதை செய்து கொள்ளுங்கள்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்தியர்கள் இந்தி மொழியைக் கற்க வைப்பதற்காக தட்சிண் பாரத இந்தி பிரசார சபை அமைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் வட இந்தியாவில் எத்தனை உத்தர பாரத தமிழ் பிரசார சபைகள் நிறுவப்பட்டுள்ளன?

உண்மை என்னவென்றால், வட இந்தியர்கள் தமிழையோ அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழியையோ பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கோரவில்லை. எங்கள் மீது இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்றுதான் கேட்கிறோம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் 3 அல்லது 30 மொழிகளைக் கற்பிக்க விரும்பினால் அதை செய்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டை தனியாக விட்டுவிடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News