உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த தாய், மகன் சிக்கினர்

Published On 2022-12-17 15:50 IST   |   Update On 2022-12-17 15:50:00 IST
  • போலீசார் புதுத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
  • இருவரிடமும் தலா இரண்டு கிலோ என மொத்தம் 4 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மாரண்ட‌அள்ளி, 

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர் தனிகாசலம் மற்றும் போலீசார் புதுத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

அப்போது சுகந்தலா(வயது 48), அவரது மகன் சீனிவாசன் (20) ஆகிய இருவரும் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தது தெரிய வந்தது.போலீசாரை கண்டவுடன் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

அப்பொழுது பெண் காவலர் முனியம்மாள் உதவியுடன் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் இருவரிடமும் தலா இரண்டு கிலோ என மொத்தம் 4 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News