உள்ளூர் செய்திகள்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பாற்கடல் வெங்கடேச பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட காட்சி.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்
திருப்பாற்கடல்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.