தமிழ்நாடு

சம்பவ நடத்த பொன்மலை குட்டை பகுதியில் எஸ்.பி. தங்கதுரை ஆய்வு செய்த காட்சி.

கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

Published On 2025-02-21 15:01 IST   |   Update On 2025-02-21 15:01:00 IST
  • தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது.
  • குற்றவாளிகளை 2 பேரையும் ஆஸ்பத்திரியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் தனது குடும்பத்துடன் சையத்பாஷா மலைக்கு சென்றனர்.

அப்போது அங்கு போதையில் வந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக தெரிகிறது. மேலும், அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்காத நிலையில் போலீசாரே தாமாக வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி போலீசார் தனிப்படை அமைத்து அந்த வாலிபர்களை தேடிவந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் 2 பேரும் கிருஷ்ணகிரி பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

அப்போது குற்றவாளிகள் 2 பேரும் போலீசார் கத்தியால் தாக்கினர். இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது.

மேலும் தப்பி செல்ல முயன்ற மற்றொரு குற்றவாளி நாராயணன் தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு உள்ளது.

காயமடைந்த 2 குற்றவாளிளையும், அவர்கள் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசார் என 4 பேரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகளை 2 பேரையும் ஆஸ்பத்திரியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News