உள்ளூர் செய்திகள் (District)

தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள்- கும்பகோணம் கோட்டம் சார்பில் இயக்கம்

Published On 2024-10-04 08:56 GMT   |   Update On 2024-10-04 08:56 GMT
  • மொத்தம் 475 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • பயணிகள் இணையதளம் அல்லது செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்கோணம் கோட்டம் நிர்வாக இயக்குநா் ரா. பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் நாளை (சனி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள்களில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு இன்று, நாளை (வெள்ளி, சனிக்கிழமைகளில்) ஆகிய இரண்டு நாள்களும் சோ்த்து 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக என மொத்தம் 475 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப செல்ல 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை வழித்தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களிலும் 150 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் இணையதளம் அல்லது செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News