உள்ளூர் செய்திகள்

ஓசூர் வழியாக சேலத்திற்கு காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது

Published On 2023-05-17 12:11 IST   |   Update On 2023-05-17 12:11:00 IST
  • ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3,54,000-மதிப்பிலான 615 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் சிங் (22)மற்றும் பரத் சிங் (40) ஆகிய இருவரும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு விற்பனைக்காக 2 கார்களில் கடத்தி சென்றது, தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

Tags:    

Similar News