உள்ளூர் செய்திகள் (District)

ரெயிலில் கஞ்சா பறிமுதல்

Published On 2022-09-29 09:24 GMT   |   Update On 2022-09-29 09:24 GMT
  • 8 கிலோ சிக்கியது
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் விரைவு ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது சேலம் உட்கோட்டம் ரெயில்வே போலீசார் தனிப்படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 8 பண்டல்களில் சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பதை உறுதி செய்த போலீசார் உடனடியாக ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் விசாரணை செய்தனர்.

மேலும் கைப்பற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் எனகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News