உள்ளூர் செய்திகள்

குடும்ப சண்டையை விலக்க சென்றவரின் வீட்டில் மண்ணெண்ணை குண்டு வீச்சு

Published On 2025-02-23 12:49 IST   |   Update On 2025-02-23 12:49:00 IST
  • பழனிமுத்து மற்றும் அவரின் தாய் தெய்வ நாயகி வீட்டின் முன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் நகரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகன்கள் செல்வகுமார் (வயது 33) மற்றும் சேகர்(30) இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சகோதரர்கள் 2 பேருக்கும் மீண்டும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது.

இதனைக் கண்ட அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பழனிமுத்து (38) என்பவர் சண்டையை விலக்க முற்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சகோதரர்கள் பழனிமுத்துவிடம் எங்களது குடும்ப சண்டையில் தலையிட நீ யார்? என்று கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் சண்டையை விலக்க சென்ற முத்துவின் வீட்டின் முற்பகுதியில் மர்ம நபர்கள் அதிகாலை மண்ணெண்ணை நிரப்பிய 2 பாட்டில்களில் தீ வைத்து பழனிமுத்துவின் வீட்டின் முன்பு வீசியுள்ளனர்.

இதில், வீட்டின் முன்புறம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இந்நிலையில் வெடி சத்தம் கேட்டு வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் உள் பகுதியில் படுத்திருந்த பழனிமுத்து மற்றும் அவரின் தாய் தெய்வ நாயகி வீட்டின் முன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொழுந்து விட்டு எறிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து விருத்தாசலம் அனைத்துமகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெ க்டர் சிவகாமி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்ணெண்ணை குண்டு வீசிய இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News