உள்ளூர் செய்திகள் (District)

சாத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் காளி வேடமிட்டு பூக்குழி இறங்கிய பக்தர்.

மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

Published On 2023-04-03 08:12 GMT   |   Update On 2023-04-03 08:12 GMT
  • சாத்தூர் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

மேலும் அம்பாள் தினமும் சப்பரங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

திருநங்கைகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காளியம்மன் கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் தீ மிதித்தும், அலகு குத்தியும், அம்மன் வேடமிட்டும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாத்தூர் டி.எஸ்.பி வினோஜி தலைமையில், இன்ஸ் பெக்டர் செல்லப்பாண்டின், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி யன் மற்றும் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News