இந்தியா

78வது சுதந்திர தினம்- நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை

Published On 2024-08-14 14:47 GMT   |   Update On 2024-08-14 14:47 GMT
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் அஞ்சலி செலுத்துவோம்.

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உரையாற்றி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இடங்களிலம் மூவர்ணக் கொடி பறப்பதைக் காணும்போது, நமது மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது.

நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகத்தினரும் பாடுபட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பு அளப்பரியது.

நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் அஞ்சலி செலுத்துவோம்.

நாட்டின் சுதந்திரத்திற்காக பிர்சா முண்டா தொடங்கி பல பழங்குடியின தலைவர்கள் பாடுபட்டனர்.

இந்த நேரத்தில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.

78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இதே வேளையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுக்கூருகிறேன்.

மற்ற பண்டிகைகளை போல சுதந்திர தினம், குடியரசு தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Tags:    

Similar News