இந்தியா
பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கக் கோரி முதல்வருக்கு 10,000 அஞ்சல் அட்டைகளை அனுப்பிய கவிதா
- மார்ச் 8-ந் தேதிக்குள், 2500 வழங்குவது குறித்து அறிவிக்கவில்லை என்றால், சோனியா காந்திக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவோம்.
- பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்ததை நாங்கள் அவருக்கு நினைவூட்டுவோம்
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
ஆனால் இதுவரை இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை.
பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) எம்.எல்.சி. கே.கவிதா, பெண்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தெலுங்கானா காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அஞ்சல் அட்டை இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
பெண்களுக்கு மாதம் ரூ. 2500 வழங்க கோரி முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு 10 ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தார்.
மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதிக்குள், 2500 வழங்குவது குறித்து அறிவிக்கவில்லை என்றால், நாங்கள் சோனியா காந்திக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவோம்.
அவர் இங்கு வந்து பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்ததை நாங்கள் அவருக்கு நினைவூட்டுவோம் என கவிதா தெரிவித்தார்.