இந்தியா

கர்நாடகாவில் 8 அதிகாரிகள் வீடுகளில் லோக்ஆயுக்தா சோதனை

Published On 2025-03-06 13:10 IST   |   Update On 2025-03-06 13:10:00 IST
  • 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
  • கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை குரூப் ஏ தலைமை பொறியாளர் டி.டி.நஞ்சுண்டப்பா, பெங்களூரு தரக்கட்டுப்பாடு மற்றும் தர உறுதி மற்றும் நெடுஞ்சாலை கிரேடு-1 பொறியாளர் எச்.பி.காலேஷப்பா, கோலார் உதவி நிர்வாக பொறியார் நாகராஜ், கலபுரகி திட்ட அமலாக்க பிரிவின் ஜெகநாத் உள்பட 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News